திருப்பூர், பிப்.8- கடந்த மாதம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலை யத்தில் கழிப்பிடங்கள் மூடி காணப்ப டுவதால் ஆங்காங்கே சிறுநீர் கழிக் கப்பட்டு துர்நாற்றம் வீசுவதாகப் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகை யில் பி.என். சாலையில் உள்ள புதிய பேருந்து பேருந்து நிலையம் ரூ.30.60 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு ஜன.5 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட் டது. இப்பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத் தார். புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், கோவை, மைசூர், மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய பேருந்துகள் அங்கு இயக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், புதிதாக கட்டப் பட்ட இப்பேருந்து நிலையத்தில் தாய் மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு எடுக்கும் அறை, பொருள் பாது காப்பு அறை, கழிப்பிடம் ஆகியவை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கழிப்பிடங்களும் மூடப் பட்டுள்ளதால் ஆங்காங்கே சிறுநீர் கழிக் கப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. பேருந் தின் மறு புரத்திற்கு செல்ல போடப்பட் டுள்ள நகரும் படிக்கட்டுகள் செயல்ப டாமல் உள்ளது. எந்த அடிப்படை வச திகளும் இன்றி பொதுமக்கள் சிரமத் திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் சிலர் கூறு கையில், பேருந்து நிலையத்தில் முறை யான அறிவிப்பு பலகைகள் இல்லை. பேருந்துகள் மாறி மாறி நிற்கின்றது. முக்கியமாக கழிப்பிடம் திறக்கப்படா மல் உள்ளது. மோசமான நாற்றம் அடிக் கிறது. குடிநீர் தொட்டியில் தண்ணீர் வரு வதில்லை. போதிய அளவில் குப்பை தொட்டிகள் இல்லை. கடந்த மாதம் தான் பேருந்து நிலையம் புதுபிக்கப் பட்டு திறக்கப்பட்டதாக கூறுகின்றனர். இருந்தும் பேருந்து நிலையம் இப்படி காணப்படுகிறது. அரசு முறையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண் டும் என்றார்.