districts

img

திருப்பூர் மாநகர காவல் வடக்கு துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருப்பூர், ஜன. 22 - திருப்பூர் மாநகர காவல் வடக்குத் துணை ஆணையராக அபிஷேக் குப்தா சனியன்று பொறுப் பேற்றுக் கொண்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பிகாம் எல்எல்பி பட்டம் படித்தவர். 2019 ஆம் ஆண்டு இந்திய  காவல் பணியில் நேரடி தேர்வு பெற்றவர். தமிழ கத்தில் விழுப்புரம் மற்றும் தூத்துக்குடியில் உதவி காவல்  கண்காணிப்பாளராக பணியாற்றிய இவர் தற்போது பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர துணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான  குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு விரைந்து  தண்டனை கிடைக்கவும், திருப்பூரில் போக்குவரத்து நெருக் கடியை தீர்க்கவும், உயிரிழப்பு விபத்துக்களை தடுக் கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அபிஷேக் குப்தா கூறினார்.