districts

img

திருப்பூர் குமரன் பிறந்த நாள் கொண்டாட்டம்

ஈரோடு, அக்.4- சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் பிறந்த  நாள் விழா ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப் பட்டது. கொடி காத்த குமரன் என்றழைக்கப்படும் சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் பிறந்த நாள் அக்.4 ஆம்  தேதியாகும். திருப்பூர் குமரன் என்றழைக்கப்பட்டாலும் அவர் பிறந்தது ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் தான். அங்குள்ள அவர் பிறந்த வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உரு வப்படத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி னார். தொடர்ந்து அவரது வாரிசுதாரர்களுக்கு பயனாடை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4 ஆவது மண்டல தலைவர் இல.பத்மநாபன், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.