திருப்பூர், நவ. 20 - திருப்பூர் பின்னலாடை ஏற்று மதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி என இரு பிரிவுகளும் பல்வேறு கார ணங்களால் நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ளன. ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு திருப்பூர் தொழிலை மீட்கவும், தொழிலாளர் வாழ்வைப் பாது காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் துறை யினர் எதிர்பார்க்கின்றனர். திருப்பூரில் பின்னலாடை ஏற்று மதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் என ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு பனியன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் என பல ஆயிரம் பனியன் நிறுவ னங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நேரடியாகவும், மறை முகமாகவும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். நூல் விலை வரலாறு காணாத வகையில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்து, பின்னர் ஓரளவு குறைந்துள்ளது. இந்த விலை ஏற்ற, இறக்கம் பனியன், ஆடை உற்பத்தியில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளதால், வர்த்தகம் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது.
200 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த பனியன் தற்போது 400 ரூபாய்க்கு விற் பனை செய்யப்படுவதால், அதனை வாங்க பொதுமக்கள் முன் வராத சூழலில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி செய்யப்பட்ட பனியன் ஆடைகள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே புதிய ஆர்டர்கள் இல்லாமல் பின்ன லாடை நிறுவனங்கள் ஒவ்வொன் றாக உற்பத்தியை நிறுத்தி மூடப் பட்டு வருகிறது. திருப்பூரில் சுமார் 70 சதவிகிதம் சிறு, குறு நிறுவனங்கள் முற்றாக உற்பத்தியை நிறுத்தியுள்ளன. நெருக்கடியை சமாளித்து செயல் படும் நிறுவனங்களும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்கள் மட்டுமே செயல்படும் அவல நிலை ஏற்பட் டுள்ளது. இதன் காரணமாக தொழி லாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கால கட்டம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என விழா காலங்கள் அடங்கியது என்பதால் எப் போதும் உற்பத்தி களைகட்டும். இரவு பகல் என வேலை கடுமை யாக இருக்கும். ஆனால் இந் தாண்டு ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பாவில் விலை வாசி உயர்வு, மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது, அங்குள்ள மந்த நிலை காரணமாக ஏற்றுமதி ஆர்டர்களும் பெருமளவு சரிந் துள்ளன. அதேபோல் விலை ஏற்றம் காரணமாக உள்நாட்டு வர்த்த கமும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் உற் பத்தி செய்த பொருட்கள் விற்பனை யாகாமல் பல நிறுவனங்கள் வேலையை நிறுத்தியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிய திருப்பூர் முற் றாக அதன் பொலிவை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் இத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த இந்திய பருத்திக் கழகம் நியாய மான விலையில் விவசாயிகளிடம் பருத்தியை விலைக்கு வாங்கி நேரடியாக நூற்பாலைகளுக்கு வழங்க வேண்டும். மாறாக இடைத் தரகர்கள் பெறுவதால் செயற்கை யான பற்றாக்குறை ஏற்படுத்தப் பட்டு, கடுமையான விலை ஏற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஒன்றிய அரசு நூல் விலை உயர்வை கட்டுப் படுத்த இப்பிரச்சனையில் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னலாடை துறைக்கு திருப்பூரை மையமாக கொண்டு தனி ஆணையம் உருவாக்கி தொழில் துறையின் இடர்பாடு களை களைய வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் ஆடை உற்பத்தி திருப்பூர் மட்டுமல்லாது
ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட் டங்களிலும் அதிக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இது போன்ற இக்கட்டான நிலையில் மின்சார கட்டண உயர்வை அமல் படுத்தினால் தொழில்துறையினர் கடுமையாக பாதிப்படைந்து ஆடை உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கும். எனவே மின் கட்டண உயர்வை மாநில அரசு மறுபரி சீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் கூறுகையில், திருப்பூரில் இடைவிடாது கேட்ட உற்பத்தி சத்தம் தற்போது கொஞ்சம் அடங்கி போய் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் கலக்கத்தில் இருந்தாலும் எப்போதும் போல இந்த முறையும் திருப்பூர் மீண்டு வரும் என அனைவரும் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.