திருப்பூர், பிப். 24 - திருப்பூர் மாநகர மக்களின் குடிநீர் தேவையை முழுவது மாக பூர்த்தி செய்யும் வகையில், திருப்பூர் மாநகராட்சியில் நான்காவது குடிநீர் திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள நான்காவது குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்திற்கு சனியன்று காலை திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி அலுவ லர்களுடன் நேரில் சென்று, நீரேற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். வருகின்ற கோடைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக, மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில், முறையான குடிநீரை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட் டது.