திருப்பூர், ஜன.1- திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காத நிலையில் விவசாயிகள் கடும் அதிருப்தி தெரி வித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறியதா வது: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 9 மாத காலமாக விவசாயிகள் முறை யீட்டுக் குழு கூட்டத்தை முறையாக நடக்காமலும், விவசாயிகளுக்கும் மக்களுக்கும் உரிய பதில் அளிக்கா மல் இருந்து வருவது மாவட்ட நிர்வா கத்தின் சரியான செயல் அல்ல. எனவே வருங்காலத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசா ணைப்படி விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும், விதிமீறல் என்ற பெய ரில் பயிர்க் கடன் பெற்ற 3,184 உண் மையான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யாததால் உடு மலை, மடத்துக்குளம் பகுதியில் விவசாயிகள் பாதிப்படைந்துள்ள னர் எனவே, மேற்கண்ட விவசாயிக ளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி சான் றிதழ் வழங்க வேண்டும் என்று கேட் டுக் கொள்வதோடு, வரும் ஜனவரி 4 அன்று பயிர்க்கடன் கிடைக்கும் வரை, கடன் தள்ளுபடி கிடைக்கும் வரை காத்திருக்கும் போராட்டத்தை உடுமலைப்பேட்டையில் நடத்த திட் டமிட்டுள்ளோம். இதேபோல், ஒன்றிய அரசாங் கம் கொப்பரைக்கு ஒரு ரூபாய் 55 பைசா விலை உயர்வு செய்து ஆதா ரங்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு போதுமானதல்ல, தேங் காய் எண்ணெய் விலையோடு ஒப்பி டும்போது தேங்காய் கொப்பரை ரூபாய் 150 ஆதார விலை அறிவிக்க வேண்டும். தற்பொழுது கொப்பரை தேங்காய் 90 ரூபாய்க்கு விற்பனை யாகி உள்ளது.
எனவே தமிழக அரசு ஆதாரங்களை கொடுத்து கொப் பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். மக்காச்சோளம் பரவலாக அறு வடை துவங்கும் நிலையில், கால் நடை தீவன உற்பத்தியாளர்கள் கோழிப்பண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டு விவசாயிகளை சிண்டி கேட் அமைத்து ஏமாற்றுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு உரிய விலை கிடைக்க முத்த ரப்பு கூட்டம் ஏற்பாடு செய்ய வேண் டும். மேலும், தேங்காய் நார் தொழில் பல்லாண்டுகளாக பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் நடைபெற்று வருகிறது. ஆனால் சமீபத்தில் சில பெரிய நிறுவனங்கள் தேங்காய் நார் கழிவை லே ஈசி செய்வதற்கு ரசாய னங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இதனால் தென்னைநார் தொழிலை யும் ஆரஞ்சு பட்டியலில் சுற்றுச்சூழல் துறை சேர்த்து இன்றைக்கு நார் தொழில் செய்வோர் மீது பெரும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது. மிகச் சிறு நிறுவனங்களை நடத்தி வரும் விவசாயிகளும் ஆரஞ்சு பட்டி யல் என்ற பெயரில் சுற்று சூழல் துறை மூலம் அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். உரிய ஆய்வுகள் மேற்கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருக்கிறதா என்பதை கண் டறிய வேண்டும். எனவே, இயற்கை யான சூழலில் செய்யப்படுகிற தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தா மல் தேங்காய் விவசாயிகளுக்கும் சிறு குறு தொழில் புரிபவர்களுக்கும் உதவ வேண்டும் என்றும் விவசாயி கள் சார்பில் கேட்டுக் கொள்ளவதாக எஸ்.ஆர்.மதுசூதனன் தெரிவித்துள் ளார்.