districts

img

சமாதான ஒருமைப்பாட்டுக் கழக திருப்பூர் மாவட்ட அமைப்பு மாநாடு

திருப்பூர், பிப்.6 –  அகில இந்திய சமாதான ஒரு மைப்பாட்டுக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட அமைப்பு மாநாடு திங்க ளன்று நடைபெற்றது. திருப்பூர் குமார் நகர் கருப்பரா யன் கோவில் திருமண மண்டபத்தில்  நடைபெற்ற இந்த அமைப்பு மாநாட் டிற்கு சமாதான ஒருமைப்பாட்டுக் கழ கத்தின் சார்பில் என்.சுப்பிரமணி யம், ஏ.வி.பழனிச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஷாஜஹான் வரவேற்றார். சமாதான ஒருமைப் பாட்டுமாநிலத் துணைத் தலைவர்  கே.சி.கோபிகுமார் மாநாட்டைத் தொடக்கி வைத்து அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத் தின் நோக்கங்கள், செயல்பாடுக ளைப் பற்றிப் பேசினார். திருப்பூர் அமைப்பின் சார்பில் ஆர்.கிருஷ் ணன், ஆர்.நாகராஜ் எம்.சி., எஸ். ரவிச்சந்திரன் எம்.சி., செ.முத்துக் கண்ணன்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந் திய சமாதான ஒருமைப்பாட்டுக்குழு வின் திருப்பூர் மாவட்ட த் தலைமைக் குழுவாக ஆர்.கிருஷ்ணன், ஆர்.நாக ராஜ், என்.சுப்பிரமணியம், கே.எஸ். ரணதேவ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். பொதுச்செயலாளர்களாக எஸ்.சுப்பிரமணியம், ஏ.வி.பழனிச் சாமி, துணைத் தலைவர்களாக பி. செல்வராஜன், டி.சசிகலா, தௌ.சம் சீர் அகமது, எஸ்.தெய்வசிகாமணி, செயலாளர்களாக ஏ.ராணி, ஆர்.ஷாஜஹான், பி.கனகராஜ், எம். கோபாலகிருஷ்ணன், பொருளாள ராக வி.ராமமூர்த்தி, இணைப் பொரு ளாளராக என்.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநாட்டை நிறைவு செய்து வைத்து ஒருமைப்பாட்டுக் கழக  மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் உரையாற்றினார். நிறை வாக வி.ராமமூர்த்தி நன்றி கூறி னார்.