திருப்பூர், நவ. 25 – தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட 5 ஆவது பேரவை, அரிமா சங்க அலுவலகத் தில் நடைபெற்றது. சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.கலா சங்கத்தின் கொடியை ஏற்றி வைத் தார். மாவட்டப் பேரவைக்கு மாவட்டத் தலைவர் எம்.விஜயலட்சுமி தலைமை ஏற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.பாக்கியம் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் ச.ஆறுமுகம் அஞ் சலி தீர்மானம் வாசித்தார். மாநிலத் துணைத்தலைவர் ஆ.பெரியசாமி பேர வையை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ச.முருகேசன், மாவட்டப் பொருளாளர் அ.ராஜேஸ்வரி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத் தனர். இம்மாவட்ட பேரவையில் நிய மிக்கப்பட்ட, புதிய நிர்வாகிகள் தீர்மா னங்களை முன்மொழிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்டப் பேர வையில், சங்கமும் எதிர்கால நமது கட மைகளும் என்ற தலைப்பில், முன்னாள் மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி கருத்துரையாற்றினார். புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்டத் தலைவர்: ஏ.ஜெயந்தி, மாவட்டச் செயலாளர்: டி.மாசிலாமணி, மாவட்ட பொருளாளர்: தமிழ்செல்வி, மாவட்ட துணைதலைவர்கள்: எம்.விஜ யலட்சுமி, தெய்வானை, சகுந்தலா, அபி ராமி, மாவட்ட இணைசெயலாளர்கள்: சாந்தாமணி, சௌபரணியா, ராஜா மணி, எலிசபெத் மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தாமணி ஆகியோர் பொறுப்பேற்றனர். பணி ஓய்வு பெற்ற மாவட்டச் செய லாளர் ச.முருகேசன், மாவட்டப் பொரு ளாளர் அ.ராஜேஸ்வரி, மாநில செயற் குழு உறுப்பினர் பி.பாக்கியம், மற்றும் விருப்பத்தின்படி, விடுவிக்கப்பட்ட, மாவட்ட துணைத்தலைவர் ச.ஆறுமுகம் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத் தப்பட்டது. முடிவில், மாநிலத் தலைவர் ஆர்.கலா நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் டி.மாசிலா மணி நன்றி கூறினார்.