திருப்பூர், மார்ச் 18 - திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக, தற்போதைய எம்.பி. கே.சுப்பராயன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டு இருக்கிறார். திருப்பூர் அணைக்காடு பகுதியைச் சேர்ந்த மில் தொழிலாளியும், கம்யூனிச ஆதரவாளருமான குப்புசாமியின் மகன் கே.சுப்பராயன். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி (நாடு சுதந்திரம் பெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு) பிறந்தவர். வயது 76. பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் சுப்பராயன், பனி யன் நிறுவனத்தில் அலுவலராக வேலை செய்த போது 1967 ஆம் ஆண்டு இந் திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 22 வயதில் கட்சியின் முழு நேர ஊழி யராக செயல்பட தொடங்கினார். தொழிற்சங்க பணியில் ஈடுபட்டார். திருப்பூர் வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், ஏஐடியுசி பனியன் தொழிலாளர் சங்கச் செயலா ளர் எனப் பணியைத் தொடங்கி, இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலாளர், மாநி லத் துணைச் செயலாளர், அகில இந் திய தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்திருக்கிறார். இந்திய கம் யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் கட்டுப்பாட்டு குழுத் தலைவரா கவும், அகில இந்திய ஏ.ஐ.டி. யூ.சி சங்கத்தின் துணைத் தலைவராக வும், பனியன் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வரு கிறார். 1970-ல் தொடங்கி, இந்திய கம்யூனி ஸ்ட் கட்சி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். 1985 - 88, 1996-2001 ஆம் ஆண்டுகளில் திருப்பூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் வெற்றி பெற்ற சுப்பராயன், 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூரில் தோல்வியைத் தழுவினார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 17 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் அதி முக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந் தனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்பொழுது 2024 நாடாளு மன்றத் தேர்தலில் மீண்டும் திருப்பூரில் களம் இறங்குகிறார்.