districts

திருப்பூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்

திருப்பூர், ஜன.25 - தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத் தும் 19ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளி யன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தும் என்று தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அடிப்படை யில் திருப்பூர் மாவட்டப் புத்தகத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு, திருப் பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து, 19 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவை ஜன.27 ஆம் தேதி முதல் பிப்.5 ஆம் தேதி வரை 10 நாட்கள் திருப்பூர் காங்கேயம் ரோடு  வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடத்துகின்ற னர். இதற்காக மொத்தம் 150 அரங்கங்கள் அமைக் கப்பட்டுள்ளன. இதில் 126 புத்தக விற்பனை அரங்கு கள், 24 அரசுத் துறை சார்ந்த அரங்கங்கள் ஆகும்.  தினமும் காலை 11 மணிக்கு புத்தகக் கண்காட்சி  தொடங்கும். இரவு 9.30 மணி வரை நடைபெறும். அனைவருக்கும் அனுமதி இலவசம்.

தொடக்க விழா

ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை  அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைக் கின்றனர். பொது நூலக இயக்குநர் க.இளம் பகவத், திட்டத்தை விளக்கி வைத்துப் பேசுகி றார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதி கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்

பங்கேற்கும் நிறுவனங்கள்

இந்த புத்தகத் திருவிழாவில் சாகித்ய அகா டமி, என்சிபிஎச், காலச்சுவடு, கிழக்கு, கௌரா, விக டன்,  பாரதி, விஜயபாரதம், விஜயா, தமிழினி, உயிர்மை, பெரியார் சுயமரியாதை, அறிவியல் பலகை, ஆரோக்யா புக்ஸ், இந்து தமிழ்திசை, சக்சஸ் புக்ஸ், புக் வேல்ட், புக் பார் சில்ட்ரன் உள் ளிட்ட தமிழகத்தின் முன்னணி புத்தகப் பதிப்ப கங்கள், விற்பனையாளர்கள் இந்த கண்காட்சி யில் பங்கேற்கின்றனர். ஆயிரக்கணக்கான தலைப் புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் பார்வையா ளர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கின்றன.

தள்ளுபடி சலுகை

இந்த புத்தகத் திருவிழாவில் வாங்கும் அனைத்து வித புத்தகங்களுக்கும் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும். அது  தவிர பள்ளி மற்றும் நூலகங்களுக்கு மொத்தமாக புத்தகங்கள் வாங்கினால் சம்பந்தப்பட்ட பதிப்ப கத்தாரிடம் கூடுதல் தள்ளுபடி பெற்றுக் கொள்ள லாம். இங்கு குறைந்தபட்சம் ரூ.1000 மதிப்பில் புத்த கங்கள் வாங்குவோருக்கு புத்தக ஆர்வலர் என்ற  சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் புத்த கத் திருவிழாவில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவியர்களில், குலுக்கல் முறையில் தலா 10  பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் ஒவ்வொ ருவருக்கும் தலா ரூ.500 மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்படும்.

கலை, இலக்கிய நிகழ்ச்சிகள்

புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலை கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. இதில் தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கிய பண்பாட்டு ஆளுமைகள் பங்கேற்கின்றனர். கலை மாமணி பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், சு.வெங்கடேசன் எம்பி., சுபஸ்ரீ தணிகாசலம், பேராசி ரியர் பர்வையின் சுல்தானா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார்,. மாநகர காவல் ஆணை யர் பிரவீன் குமார் அபினபு, த.ஸ்டாலின் குண சேகரன், கவிஞர் நந்தலாலா, எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், மருத்துவர் கு.சிவராமன், தொல்லி யல் துறை கண்காணிப்பாளர் கி.அமர்நாத் ராம கிருஷ்ணா, பேராசிரியர் செ.மோகனசுந்தரம், ஆன் மீக சொற்பொழிவாளர் சுகி சிவம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு நாளும் காலை நேரம் மாணவர்களுக் கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஜனவரி 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை மாணவ மாணவியர் திறனாய்வுப் போட்டி யில் தேர்வு பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா  நடைபெறுகிறது. ஜனவரி 8ஆம் தேதி மாவட்டம் முழுவதும் சுமார் 20 இடங்களில் நடத்தப்பட்ட ஓவியம், கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இங்கு பரிசுகள், சான்றிதழ் கள், விருதுகள் வழங்கப்படும். புத்தகக் கண்காட்சி வளாகத்தில் கல்வித்துறை  அரங்கில் செல்பி கார்னர் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புத்தகத் திருவிழா மைதானத்திலும் ஒரு செல்பி கார்னர் அமைக்கப்படுகிறது. இது  தவிர சைவ அசைவ சிற்றுண்டி வகைகளுக்கான உணவு அரங்கம் (ஃபுட் கோர்ட்) அமைக்கப்பட்டுள் ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு விசாலமான வாகன நிறுத்தம், கழிப்பிட வசதி ஆகியவையும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளன. திருப்பூரின் பண்பாட்டு  திருவிழாவாக நடைபெறும் புத்தகத் திருவிழாவை அனைத்து வகையிலும் வெற்றி பெறச் செய்ய  மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பின்னல் புக்  டிரஸ்ட் நிர்வாகிகள் முழு வீச்சில் பணியாற்றி வரு கின்றனர்.