திருப்பூர், ஜன. 9 - தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 19 ஆவது ஆண்டு திருப்பூர் புத்தகத் திருவிழா இடமாற்றம் செய் யப்பட்டு உள்ளது. திருப்பூர் புத்தகத் திருவிழாவை ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை திருப்பூர் நஞ் சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடத் துவது என்று மாவட்ட நிர்வாகம் தீர்மானித்திருந்தது. இந் நிலையில் தற்போது இந்த புத்தகத் திருவிழாவை வேலன் ஹோட்டல் வளாகத்தில் நடத்துவது என்று மாவட்ட நிர்வாகம் இடமாற்றம் செய்துள்ளது. ஏற்கெனவே திட்டமிட்ட முறையில், புத்தகத் திரு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடத்துவதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.