districts

கம்யூனிச சித்தாந்தத்தை குழி தோண்டி புதைக்க வேண்டுமாம்!

திருப்பூர், மார்ச் 30- கம்யூனிச சித்தாந்தத்தைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்று திருப்பூர் பாரதிய ஜனதா கட்சி வேட் பாளர் முருகானந்தம் வெறுப்பைக் கக்கி இருக்கிறார். திருப்பூர் பாஜக வேட்பாளர் முரு கானந்தம் வெள்ளியன்று அமமுக  ஊழியர் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசி னார். அப்போது, ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தலில் கம்யூனிச சித்தாந்தம் குழி தோண்டிப் புதைக்கப்படும் என்று  கொக்கரித்தார். பாரதிய ஜனதா கட்சி, பாசிச குணம் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.  பின்புலத்துடன் செயல்படக்கூடிய பிற்போக்குத்தனமான கட்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளி வாக வரையறுத்திருக்கிறது. சுதந்திர  இந்தியாவுக்கும், இந்த நாட்டு மக்க ளுக்கும் அடிப்படையிலேயே எதி ரான கட்சி பாஜக என்பதால்தான், அதை வீழ்த்த அனைத்து மதச்சார் பற்ற அரசியல் சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகி றது. எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்த, இந்தியா அணிச்சேர்க்கை உருவாக் கத்திலும் தீர்மானகரமான பங்களிப்பு செய்துள்ளது. ஒருபுறம் இந்துத்து வம் என்று சொல்லி அரசியல் அணி திரட்டலில் ஈடுபடும் பாஜக, மறுபுறம் கார்ப்பரேட் பெரு முதலாளிகள் நல னைப் பாதுகாப்பதற்கு கண்மூடித் தனமாக செயல்பட்டு வருகிறது.  இந்த சூழ்நிலையில்தான் தேர் தல் பத்திரம் என்ற பெயரில் கார்ப்ப ரேட் பெரு முதலாளிகளிடம் வகை  தொகை இல்லாமல் பணம் பெறும்  முறையைக் கொண்டு வந்தது. தேர் தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள்  நிதி பெறும் நடைமுறையைக் கொண்டு  வந்தவுடனேயே, முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிதான். மிக உறுதியான எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன் றத்திலும் வழக்குத் தொடுத்தது. தேர் தல் பத்திரம் என்ற மொத்த நடைமு றையே சட்டப்படி தவறானது என்று  உச்சநீதிமன்ற அமர்வு தெளிவாக தீர்ப்பு கொடுத்திருக்கிறது. அத்துடன் தேர்தல் பத்திரம் வாங்கி கொடுத்த நிறுவனங்கள், அதை எந்தெந்த அரசி யல் கட்சிகள் பெற்றுள்ளன என்ற முழு விபரத்தையும் வெளியிடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் தேர்தல் பத்திரம் என்ற பெயரில் நடைபெற்றிருக்கும் ஊழல் அம்பலமானது. குறிப்பாக ரூ.8000 கோடிக்கு மேல் வாங்கியிருக் கும் பாஜக, ஊழலற்ற கட்சி, ஊழ லுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற பிம் பம் சுக்குநூறாக நொறுங்கி விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர் தல் பத்திரத்தின் மூலம் பணம் பெற் றுக் கொண்டு, சட்டங்களை வளைத்து கொள்ளையடிப்பதற்குச் சலுகைக ள் காட்டப்பட்டது.

நிதி தராத அல்லது  குறைவாக நிதி கொடுத்த நிறுவனங்க ளுக்கு அமலாக்கத்துறையை ஏவி விட்டு பணம் பெற்றதும் அம்பலமாகி பாரதிய ஜனதா கட்சியின் பெயர் நாறி வருகிறது. சந்தி சிரிக்கிறது. பாஜக வின் அடித்தளத்தையே ஆ.ட்டம் காணச் செய்திருக்கும் தேர்தல் பத்தி ரம் ஊழலை உறுதியுடன் எதிர்த்து  அம்பலப்படுத்தியதால், கம்யூனிஸ் டுகள் மேல் அவர்களுக்கு ஆத்திரம் கொப்பளிக்கிறது.  வெறுப்பின் உச்சத்தில் பிதற்று கிறார்கள். இந்த நாடாளுமன்றத் தேர் தலில் பாஜக ஆட்சி வீழ்த்தப்படும் என் பதை ஆர்எஸ்எஸ், பாஜக கும்பல் நன் றாக உணர்ந்திருக்கிறது. வீழ்த்தப் படப்போவது பாஜகவின் அரசதிகா ரம் மட்டுமல்ல, அவர்களது பிற்போக் குத்தனமான இந்துத்துவ சித்தாந்த மும்தான். எனவே, பாஜக தோல்வியை உத் தரவாதப்படுத்தியிருக்கும் கம்யூ னிஸ்டுகளை வெறுத்து, கம்யூனிச சித்தாந்தத்தை குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என கொக்கரிக் கிறார்கள். ஹிட்லர், முசோலினி  போன்ற இவர்களது பாட்டன்களும் இப்படித்தான் கொக்கரித்தார்கள். ஆனால் அவர்கள் வரலாற்றின் குப் பைத் தொட்டியில் வீசப்பட்டார்கள் என்பதே வரலாறு. இப்போது இந்துத் துவ சித்தாந்தமும் வீழ்த்தப்படும், நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா வெற்றி பெறும்!