திருப்பூர், ஏப்.26- தமுஎகச திருப்பூர் தெற்கு கிளை மாநாடு ஞாயிறன்று காலை தோழர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. கிளை தலைவர் வேலா.இளங்கோ தலைமையேற்றார். தமுஎகச மாவட்ட தலைவர் பி.ஆர்.கணேசன் மாநாட்டை துவங்கி வைத்து பண்பாட்டு தளத் தில் இயங்கும் தமுஎகசவின் நோக்கம் குறித்து பேசினார். மாவட்ட துணை செயலாளர் உடுமலை தோழன் ராஜா வாழ்த்திப் பேசினார். செயலாளர் நிதர் சனா அறிக்கையை முன் வைத்து பேசி னார். இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவராக கவிஞர் கோவை சதாசி வம், துணை தலைவர்களாக நிதர்சனா, சுஜாதா பிரகாஷ், செயலாளராக வேலா இளங்கோ, துணை செயலாளர் களாக பாடகர் கிருஷ்ணன், வழக்கறி ஞர் தமயந்தி அமர்நாத், பொருளாள ராக மு.துரைசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 14 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட் டனர். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயலாளர் ஆர்.குமார் பேசி னார். முன்னதாக, பொது மாநாடு நடை பெற்றது. இதில் குழந்தைகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதி சுப்பரா யன் வாழ்த்திப் பேசினார்.