districts

img

தனியாருக்கு கொடுக்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தம் ரத்து

அவிநாசி, நவ.1- திருமுருகன்பூண்டி நகராட்சியில் தனியா ருக்கு கொடுக்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந் தத்தை, அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ரத்து செய்யப்பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நக ராட்சியில் தூய்மைப் பணி தனியார்மயமாக்கப் பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குப்பை முதல் சாக்கடை பிரச்சனை வரை தீர்க்கப்பட முடியாமல், மக்கள் மத்தியில் பதில் கூற முடியாமல் நகர்மன்ற உறுப்பினர்கள் தவித்து வந்தனர். இதையடுத்து தூய்மைப் பணி  தனியாருக்கு கொடுக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி, சில தினங்களுக்கு முன்பு தலைவரி டம் நகர்மன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். இந்நிலையில், திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட் டம் தலைவர் குமார் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 38க்கும் மேற்பட்ட மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்டு, கவுன்சிலர் கள் கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நக ராட்சியில் தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கப்பட்டதை ரத்து செய்யும் தீர்மானம்  அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப் பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் சுப்ரமணியம் பேசுகையில், தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந் தோறும் ஊதியம் வழங்குவதற்கான ரசீது வழங்க வேண்டும். திருமுருகநாதர் சுவாமி கோவில் அருகே உள்ள கழிப்பிடத்தை புதுப்பித்து தர  வேண்டும். ராக்கியபாளையம் பேருந்து நிறுத்தம்  முதல் உம்மையஞ்செட்டிபாளையம் சாலை பகுதி  வரை சாக்கடை அமைப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் நிலம் கொடுத்தும்,இதுவரை அதற்கான பணிகள் நடைபெற வில்லை. உடனடியாக அத்திட்டத்தை நிறை வேற்ற வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் 14  ஆவது வார்டு உறுப்பினர் தேவராஜன் பேசுகை யில், பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் ஈமத் தொகை கிடைப்பதில்லை. விண்ணப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை உடன டியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், உள் ளாட்சி மன்ற தீர்ப்பின் அடிப்படையில், புதிய குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், என வலியுறுத்தி னார்.