உதகை,மார்ச் 13- கூடலூர் மகளிர் பள்ளி அருகே காபி தோட்டத்தில் மூன்று புலிகள் நடமாடிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகி றது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் கேரளா வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு சமீப காலமாக வன விலங்குகள் அடிக்கடி குடி யிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. இந்நிலையில் கூட லூர் அருகேயுள்ள பாத்திமா மகளிர் பள்ளி வளாகத்தின் அரு கேயுள்ள காபி தோட்டத்தில் இரவு மூன்று புலிகள் நடந்து சென்றுள்ளது. இது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசி டிவியில் தெரியவந்துள்ளது. பள்ளி வளாகத்திற்கு அருகே புலிகள் நடமாடியது அப்ப குதி மக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. அசம்பா விதங்கள் ஏற்படும் முன் புலியின் நடமாட்டத்தை கண்கா ணித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதியினர் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அத்தி யாவசிய தேவையை தவிர்த்து பொதுமக்கள் யாரும் வீடு களை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், யாரே னும் புலிகள் நடமாட்டத்தை கண்டால் உடனடியாக வனத்து றைக்கு தகவல் அளிக்க வேண்டும் மேலும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பயணிப்பது தவிரக்க வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.