திருப்பூர், ஜூலை 7- திருப்பூர் மாநகராட்சி விஜயா புரம் அரசு ஆரம்பப் பள்ளி அருகே கம் பிவேலியின் கல்தூண்கள் பெயர்ந்து கீழே விழுந்ததில் மூன்று மாணவிகள் காயமடைந்தனர். திருப்பூர் மாநகராட்சி நல்லூரை அடுத்த விஜயாபுரம் பகுதியில் ஆரம் பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். போதிய வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால், மூன் றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவ, மாணவிகளை பள்ளியின் அருகில் உள்ள சமுதாய நலக்கூ டத்தில் அமர்த்தி ஆசிரியர்கள் வகுப்பு நடத்தி வருவதாக கூறப்படு கிறது. இந்த நிலையில் வியாழனன்று காலை நான்காம் வகுப்பு மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் சமுதா யக்கூடத்தில் இருந்து பள்ளிக்கு அழைத்து வந்தனர். அப்பொழுது மாணவ, மாணவிகள் வரிசையாக நடந்து வந்தனர். அப்போது கம்பி வேலி அருகே நடந்து சென்றபோது மாணவி ஒருவரின் சீருடை அந்த வேலி கம்பியில் சிக்கிக் கொண்டது. அது தெரியாமல் அந்த மாணவி தொடர்ந்து நடந்து செல்ல முற்பட் டார். அப்போது கம்பிவேலியின் இரண்டு கல்தூண்கள் மண்ணில் இருந்து சரிந்து கீழே விழுந்தது. இதில் 4ஆம் வகுப்பு பயிலும் ஜெப ராணி (9), மகிழ்ந்தி (9), கவிமலர் (9) ஆகிய மூன்று மாணவிகளுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரி யர்கள் காயமடைந்த மாணவிகளை உடனடியாக திருப்பூர் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நல முடன் உள்ளனர்.