districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கல்விக்கடன் பெற்றவர்களை அச்சுறுத்துவதா?

நாமக்கல், ஜன. 8- கல்விக்கடன் குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்  குமாரபாளையத்தில் நடைபெற்றது.  நாமக்கல் மாவட்டம் கல்விக்கடன் குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை பிரிவு தனியார் அரங்கத்தில் நடந்தது. சிபிஐ, நிர் வாகி நஞ்சப்பன், சிறு குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்  தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தனர்.  இதில் கல்விக் கடன் பெற்று பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் ஆதங்கத் தையும், வங்கி அதிகாரிகள் கல்வி கடனை வசூலிக்க அத்து மீறும் செயல்களில் ஈடுப்பட்டார்கள் என்பதை விவரித்தனர்.  முன்னதாக, வழக்கறிஞரும், சமூக செயல்பாட்டாள ருமான வழக்கறிஞர் பா.பா.மோகன், உயர் நீதிமன்ற வழக்க றிஞர் சுபாஷ், பவானி, சி.பி.ஐ நகரச் செயலாளரும் வழக்கறி ஞருமான பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று இப்பிரச்ச னையை எதிர்கொள்வது குறித்து உரையாற்றினர்.

சேலம்: விபத்தில் இளைஞர் பலி

சேலம், ஜன.8- ஓமலூர் அருகே திமிரிகோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மின்கம்பத்தில் மோதி பரிதாபமாக உயிரி ழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள  காமாண்டபட்டி பகுதியை சேர்ந்தவர் பிர வீன்குமார். இவர் தனது நண்பர்களான தினேஷ்குமார் மற்றும் அவரது சகோ தரர் சஞ்சய் ஆகிய மூன்று பேரும்  சனிக்கிழமையன்று இரவு சுமார் 11 மணி யளவில் மேச்சேரி மார்க்கத்திலிருந்து ஓம லூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராமல் சாலையின் இடது  புறம் உள்ள மின்கம்பத்தில் மோதி 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில்  படுகாயம் அடைந்த பிரவீன்குமார், தினேஷ் குமார் மற்றும் சஞ்சய் ஆகிய மூவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவரையும் பரிசோதித்த மருத் துவர்கள் பிரவீன்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், மற்ற இரண்டு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரி வித்தனர். சம்பவம் அறிந்து மருத்து வமனைக்கு வந்த ஓமலூர் போலீசார் பிரவீன்  குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகா யமடைந்த 2 பேரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மக்கள் பயன்பாட்டு வந்த புதிய குடிநீர் குழாய்

சேலம், ஜன. 8- ஆத்தூரில் மூன்று லட்சம் மதிப்பிலான குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக் கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 28 ஆவது வார்டு முத்துலட்சுமி தெருவில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த குடிநீர் குழாய் 10  ஆண்டுகளுக்கு மேலாக சேதமாகி இருந்த  நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத் திற்கு உள்ளாகி வந்தனர். குடிநீர் குழாயை  சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலை யில், நகராட்சி நிர்வாகம் சார்பில் மூன்று லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தண்ணீர் குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டன. இந்நிலையில், பணிகள் முழுவதும் நிறை வடைந்ததைத் தொடர்ந்து, அதனை பொது மக்கள் பயன்பாட்டிற்காக, ஆத்தூர் நகர மன்றத் தலைவர் நிர்மலா பபிதா துவக்கி வைத்தார். தொடர்ந்து, தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக் கன் விநியோக பணியையும் துவக்கி வைத் தார். இந்நிகழ்வின் போது 28 ஆவது வார்டு  நகர மன்ற உறுப்பினர் யசோதா மற்றும் திமுக  நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

நலவாரிய தொழிலாளர்களுக்கு ரூ.3000  பொங்கல் பணம் வழங்க கோரிக்கை

திருப்பூர், ஜன. 8 – நலவாரியத் தொழிலாளர்களுக்கு பொங்கல் பணம் ரூ.3  ஆயிரம் வழங்குமாறு கோவை, பெரியார் மாவட்ட விசைத்தறி  தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (எம்எல்எப்) பொதுச் செய லாளர் வி.பாண்டியராஜ் கோரியுள்ளார். அதேபோல் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பணம் ரூ.1000  அறிவித்துள்ளதில், வருமான வரிக் கணக்கு (ஐடி) தாக்கல்  செய்வோருக்கும் வழங்க வேண்டும். குறிப்பாக, வீடு கட்டுவ தற்கு வங்கிக் கடன் வாங்குவதற்காக நடுத்தர மற்றும் கூலி  வேலை செய்வோர், விசைத்தறி, சிறு, குறு தொழில் செய் வோர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்கின்றனர். அவர் களுக்கு ரூ.1000 கிடைக்காது என டோக்கன் தரவில்லை. முதல் வர் இதைப் பரிசீலித்து உடனடியாக பொங்கல் பரிசுத் தொகைத் தர வேண்டும் என்றும் பாண்டியராஜ் கோரி யுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

திருப்பூர், ஜன.8- தனது பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக  மகன் மற்றும் மருமகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார். திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை  சேர்ந்த சந்திரா என்பவர் தனது கணவர் முத்துசாமி இறந்த நிலையில் தனது மகன் சுரேஷ்குமார் மற்றும் ரூபினி ஆகியோ ருடன் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்துள் ளனர்.  கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்து  சுரேஷ்குமார்  மற்றும் மருமகள் ரூபினி ஆகியோர் தனது பெயரில் உள்ள  15 லட்சம் மதிப்புள்ள 8 சென்ட் நிலத்தை அபகரிப்பதற்காக  பத்திரத்தில் கையெழுத்து போடு என வற்புறுத்தி மிரட்டல் விடுத்து வருவதோடு, தன்னை கொடுமைபடுத்துவதாகவும், இதுகுறித்து ஏற்கனவே காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மகன் மற்றும் மருமகள் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதால் அவர்கள் மீது  நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்து  தர வேண்டும் என வலியுறுத்தி சந்திரா, மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திடீரென மண்னென்யை ஊற்றிக்கொண்டு தீக்கு ளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  உடனடியாக பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மூதாட்டி  மீது தண்ணீர் ஊற்றி விசாரனைக்காக அழைத்துச் சென்ற னர்.

ரோபாடிக் ஒலிம்பியாட்டில் பெம் பள்ளி மாணவர்கள் சாதனை

திருப்பூர், ஜன. 8 - திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த சனிக்கி ழமையன்று தமிழ்நாடு அளவிலான ரோபாடிக் ஒலிம்பியாட்  போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 85 பள்ளிகளில்  இருந்து 650 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த ரோபா டிக் போட்டியில் திருப்பூர் பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ்  பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்.அஜய், ஆர். நிதின், டி.எம்.விபின் சஸ்திக் ஆகியோர் செய்திருந்த ரோபாட் டிற்கு மாநில அளவில் மூன்றாம் பரிசு வெண்கலப் பதக்கமும்  ரொக்கப் பரிசும் கிடைத்தது. இந்த ரோபாட் செய்திட உதவிய  லாவாண்யா ஆசிரியர் மற்றும் மாணவர்களை பள்ளியின் உதவி  செயலாளர் டாக்டர் வி.சரண்யா மற்றும் பள்ளியின் சீனியர்  முதல்வர் கெளசல்யா ராஜன் ஆகியோர் பாராட்டினர்.

தனியார் பனியன் கம்பெனியில் குழந்தை தொழிலாளர் இருவர் மீட்பு

திருப்பூர், ஜன. 8 - திருப்பூரில் பிரபல தனியார் பனி யன் கம்பெனியில் குழந்தை தொழி லாளர்களை வேலைக்கு அமர்த்தி யது கண்டுபிடிக்கப்பட்டு இருவர் மீட் கப்பட்டனர். திருப்பூர் குழந்தைகள் உதவி மையத்திற்கு தொலைபேசி  வாயி லாக திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதி யில் செயல்பட்டு வரும் தனியார் பனி யன் கம்பெனியில் குழந்தை தொழி லாளர்கள் பணி புரிவதாக ஞாயி றன்று மாலை புகார்  பெறப்பட்டது.  இந்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் உதவி மைய  பணியா ளர்கள் நேரில் ஆய்வு செய்து தக வலை உறுதிப்படுத்தினார். பின்னர்  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா  அறிவுறுத்தலை பெற்று, குழந்தை கள் உதவி மைய மேற்பார்வையாளர் செல்லமணி மற்றும் தனசூர்யா ஆகியோர் திங்களன்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி  இயக்குனர் சேதுபதியுடன் இணைந்து, நெருப்பெரிச்சல் பகு திக்குச் சென்றனர். அங்கு செயல் பட்டு வரும் அஸ்வதி என்ற தனியார்  பனியன்  கம்பெனியில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.  இந்த ஆய்வின் போது 14 வயது  பூர்த்தி அடைய ஒரு சிறுமியும், 18  வயது பூர்த்தி அடையாத வளரிளம்  பருவ சிறுவனும் அங்கு பணிபுரிந்து வருவது கண்டறியப்பட்டது. இருவ ரையும் மீட்ட அலுவலர்கள் திருப்பூர்  குழந்தைகள் நலக்கூட குழுவிற்கு தக வல் தெரிவித்து அவர்களது அறிவு றுத்தல் படி, இருவரையும் பெற்றோரி டத்தில்  ஒப்படைத்தனர். ஆலோச னைகளும் அறிவுரைகளையும் வழங்கி இது தொடர்பான மேல் விசார ணைக்காக சிறுவன், சிறுமி இருவ ரும் பெற்றோர்களுடன் செவ்வா யன்று மாவட்ட ஆட்சியராக அலுவல கத்தில் உள்ள குழந்தைகள் நலக்கு ழுவில் ஆஜராகும் படி அறிவுறுத்தி னர். மேலும் குழந்தைகளை பணிக்கு  அமர்த்திய நிறுவனத்தின் உரிமையா ளர் மீது தொழிலக பாதுகாப்பு மற்றும்  சுகாதார உதவ இயக்குனர் மூலம் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இது போன்ற குழந்தை தொழிலாளர்கள் குறித்து புகார் அளிக்க குழந்தைகள் உதவி  எண்  1098-யை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தை கள் உதவி மையம் ஒருங்கிணைப்பா ளர் சு.கதிர்வேல் இத்தகவலை தெரி வித்துள்ளார்.

 நிலக்கடலை ஏலம்

அவிநாசி, ஜன.9- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  நடை பெற்ற ஏலத்தில் குவிண்டால்  ஒன்றுக்கு முதல் ரக நிலக்க டலை ரூ.7,500 முதல் ரூ.7,830  வரையிலும், இரண்டாம் ரக  நிலக்கடலை ரூ.7,000 முதல்  ரூ.7,500 வரையிலும், மூன் றாம் ரக நிலக்கடலை ரூ.6,000  முதல் ரூ.7,000 வரையிலும் பச்சை நிலக்கடலை ரூ.4,000 முதல் ரூ.6,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16,10 இலட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.

அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

உதகை, ஜன. 8- உதகை எமரால்டு ஹைட்ஸ் கல்லூரி யில், அறிவியல் ஆசிரியர்களுக்கு மாவட்ட  அளவிலான பணியிடை பயிற்சி முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை  எமரால்டு ஹைட்ஸ் கல்லூரி வளாகத்தில், சென்னை  தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில  மன்றம் சார்பில், அறிவியல் ஆசிரியர்க ளுக்கான பணியிடை பயிற்சி முகாம் ஞாயி றன்று துவங்கியது.  இம்முகாமில், மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களுக்கான பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி 8 ஆம் தேதி முதல் வரை 12 ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் உதகை,  குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி  அறிவியல் ஆகிய துறைகளை சேர்ந்த பேராசி ரியர்கள் இப்பயிற்சியினை வழங்குகின் றனர். இப்பயிற்சியின் மூலம், அறிவியல் துறையில் தற்போதுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆசிரியர்கள் அறிந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக அமையும் என இம்முகாம் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.

கோபி: காவலர் தூக்கிட்டு தற்கொலை

கோபி, ஜன.8- கோபி அருகே காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, விசாரணை நடைபெற்று வருகிறது.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓட்டர்கரட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருப வர் சசிகுமார். காவலரான இவருக்கு தேவி என்ற மனைவி யும், இருமகன்களும் உள்ளனர். கடத்தூர் காவல் நிலையத் தில் பணியாற்றி வந்த சசிகுமார், கடந்த சில மாதங்களாக பணிக்கு செல்லாமால் வீட்டிலேயே இருந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கடத் தூர் காவல் நிலையத்திலிருந்து, நீலகிரி மாவட்டம் அரு வங்காடு காவல்நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டார். இதனிடையே, அருவங்காடு காவல்நிலையத்தில் 10 நாட்கள் மட்டுமே பணியில் இருந்த அவர், மீண்டும் பணிக்கு செல்லமால் வீட்டில் இருந்துள்ளார்.  இந்நிலையில், சனியன்று மதியம் சசிகுமாரின் தாயார் வீட்டில் இருந்து வெளியே சென்ற வேளையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சசி குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணிச் சுமை காரணமாக இறந்தார் எனவும், மதுவுக்கு அடி மையாகி தற்கொலை செய்து கொண்டார் என இருவேறு கருத்துக்கள் அப்பகுதியில் உலவுகிறது. இதுகுறித்து போலீ சார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில்முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி

அவிநாசி, ஜன. 8:  அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தொழில்  முனைவோருக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றறது. தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம், தொழில் முனை வோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தமிழ்நாடு திறறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்றற இந்நி கழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஜோ.நளதம் தலைமை வகித்தார். வணிகவியல் சர்வதேச வணிகத் துறைற தலைவர் செ.பாலமுருகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் புதிய தொழில் மற்றும் பொருள்களை  நவீன முறையில் சந்தைப்படுத்துதல், தொழில் புதுமைகள், தொழில் முனைவோருக்கான பண்புகள், வாய்ப்புகள் உள் ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அனைத்துத் துறைற மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றறனர். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்றற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சர்வதேச வணிகவியல் துறை மாணவி காயத்ரி நன்றி கூறினார்.

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவர் கைது

கோபி, ஜன.8- கோபி அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். ரியல்எஸ்டேட் செய்து வரும் இவர், அதே  பகுதியில் தனியாக இருந்த பள்ளி சிறுமி யிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், ஜெகதீஸ் வரன் மீது கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்  பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஜெக தீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது  செய்து சிறையில் அடைத்தனர்.

தீவிரவாத தடுப்புப் பிரிவு  காவல் கண்காணிப்பாளர் நியமனம்

கோவை, ஜன.8- கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப் பாளராக வி.சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.  கோவையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம்  தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில், காரை  ஓட்டி வந்த ஜமோசா முபீன் என்பவர் உயிரிழந்தார். இச்சம்ப வம் தொடா்பாக என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதி காரிகள் விசாரித்தனர். இதைத்தொடா்ந்து, 10-க்கும் மேற்பட் டோரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தைத் தொடா்ந்து மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்  துறையினர் தீவிரப்படுத்தத் தொடங்கினர். அதன் தொடா்ச்சி யாக, தமிழக அரசால் தீவிரவாத தடுப்புப் பிரிவு கடந்த  ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பிரிவில் கோவைக்கு  காவல் கண்காணிப்பாளராக வி.சசிமோகன் ஞாயிற்றுக்கி ழமை நியமிக்கப்பட்டார். 8 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மேற்கு மண்டலத்தை மையப்படுத்தி இந்த சிறப்புப்  பிரிவு இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவன் மலையில் பதிவு செய்யப்பட்ட நிலம் கோவில் நிலம் என அறிவிப்பு

திருப்பூர், ஜன.8- திருப்பூர் அருகே பட்டாதாரர்களின் பெயர்கள் பட்டாவில்  பதிவாகி உள்ள நிலையில் கோவில் நிர்வாகத்துக்கு சொந்த மான இடம் என அறிவிப்பு வெளியானதால் பாதிக்கப்பட்ட மக் கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்ட சிவன்மலை பகுதி பொதுமக்கள் தெரிவிக்கை யில், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை  பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 550 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்நிலையில், காங்கேயம் சார்பதிவு அலுவலகம் சார்பில் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடம் என அறிவிக்கப்பட்டதோடு, பத்திரமானது பதிவு செய் வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாதாரர்களின் பெயர் களும் பட்டாவில் பதிவாகியுள்ள நிலையில் பத்திரப் பதிவு  செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், எங்க ளால் வங்கியில் கடன் கூட பெற முடிவதில்லை. இது குறித்து  வருவாய் ஆய்வாளர் முதல் அதிகாரிகள் பலரையும் சந்தித்து  மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

கொரோனா பாதிப்பு: விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்

கோவை, ஜன.8- உருமாறிய கொரோனா பரவல் காரணமாக கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோ தனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா தொற்று பரவத்  தொடங்கியதில் இருந்து, நாட்டின் பல்வேறு பகுதி களிலும் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிக ரித்து வருகிறது. அண்டை மாநிலமான கேரளத் தில் தொடர்ந்து பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதி கரித்து வருவதால், கேரளத்தையொட்டி உள்ள தமிழக எல்லையான கோவை மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவை சர்வதேச விமான  நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட் டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில்  இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் ஆகிய வெளி நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. கொரோனா பாதிப்பு வேகமாக அதிக ரித்து வருவதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து  கோவைக்கு வரும் பயணிகள் அனைவருக்கும்  காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகிலுள்ள சுகா தார மையம் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், கோவை மாவட்டத்தில் சுகாதா ரத் துறை மூலம் 4 நடமாடும் காய்ச்சல் கண்டறி யும் குழுக்களும், 36 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் உள்ள 5  மண்டலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

சுகாதார மேலாளர் பணி வாய்ப்பு

ஈரோடு, ஜன. 8- ஈரோடு மாநகராட்சியில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ்  உள்ள பொது சுகாதார மேளாலர் பணியிடம் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.சுகாதார மேலாளர் பணியிடத்திற்கு எம்எஸ்சி விலங்கியல்  பிரிவில் பூச்சியியல் பாடத்தை ஒரு பாடமாகக் கொண்டு  பட்டம் பெற்றவர் விண்ணப்பிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை ஜனவரி-19 ஆம் தேதிக்குள் ஆணை யாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம் என்ற முக வரிக்கு அனுப்பலாம் என மாநகராட்சி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.