districts

img

நொய்யல் கரையில் சமத்துவப் பொங்கல்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருப்பூர், ஜன.16- திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து நொய்யல் பண்பாட்டு அமைப்பு நடத்திய சமத்துவப் பொங் கல் விழாவில் அனைத்து மதத்தின ரும் பொங்கல் வைத்து கொண்டா டினர்.  திருப்பூர், மாநகராட்சியுடன் இணைந்து நொய்யல் பண்பாட்டு கழ கம் நடத்தும் சமத்துவப் பொங்கல் விழா ஜன.15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜன.15 ஆம் தேதி மாவட்ட ஆட்சி யர் தலைமையில் நடைபெற்ற இந்நி கழ்வில் அனைத்து மதத்தினரும் இனைந்து சமத்துவப் பொங்கல் வைத்தனர். இதில், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், ஆணையா ளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் சிறப்புரையாற்றினார். நாடா ளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன்,  திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் கே.என்.விஜயகுமார், பல்லடம்  சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன், மாநகர காவல் ஆணை யர் பிரவீன்குமார் அபினபு, சார் ஆட்சி யர் சௌமியா ஆனந்த உட்பட பலர்  பங்கேற்றனர்.  திங்களன்று நடைபெற்ற இந் நிகழ்வில் சமத்துவ கும்மி, சாகித்திய  அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதிக்கு பாராட்டு விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. செவ்வாயன்று பறையிசை, பரத நாட்டியம், கிராமிய இசை கச்சேரி, களரி மற்றும் கம்பத்தாட்டம் ஆகியவை நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.