மேட்டுப்பாளையம், பிப்.28- மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் துப் பாக்கிகளுடன் சொகுசு காரில் சுற்றித்திரிந்தவர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வரு கின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத் துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியோரம் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு சொகுசு கார் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அந்த காரை நிறுத்தி விசா ரிக்க முயன்ற போது, காரில் இருந்தவர்கள் வேகமாக அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இருப்பினும், வனத்துறையினர் காரை விடாமல் விரட்டி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 5 பேரில் மூன்று பேர் தப்பியோடினர். இருவர் மட்டும் வனத்துறையினரின் பிடியில் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன், மணி என்பது தெரியவந்தது. மேலும் காரினை சோத னையிட்டபோது, அதில் இரண்டு கள்ளத் துப்பாக்கி கள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் மூன்று தோட் டாக்கள் இருந்தது. மேலும், அவர்கள் பயன்படுத்திய காரில் போலி நம்பர் பிளேட்டை பொருத்தி இருந்த தும் தெரியவந்தது. வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மான் மற்றும் காட்டு பன்றி போன்ற வனவிலங்குகளை வேட்டையாட சேலத்தில் இருந்து வந்ததாக பிடிபட்ட இருவரும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 2 கள்ளத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் போன்றவற்றை பறி முதல் செய்து வழக்கு பதிவு செய்த சிறுமுகை வனத் துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய மூவரை யும் தீவிரமாக தேடி வருகின்றனர்.