கோவை, அக். 17- மக்களின் தேவையறிந்து களப்பணியாற்று பவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் பிரதிநிதி கள் என 12 ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப் பினர் வி.இராமமூர்த்தி பணிகளை பாராட்டி பி.ஆர். நடராஜன் எம்பி.,பேசினார். கோவை மாநகராட்சி 12 ஆவது மாமன்ற உறுப் பினராக வி.இராமமூர்த்தி உள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 9 கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தனது வார்டில் செயல்படுத்தியுள்ளார். இப்பணி களை மக்கள் மத்தியில் பிரச்சாரம் இயக்கம் துவங் கப்பட்டுள்ளது. உடையாம்பாளையம் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கோவை மாநகர பகுதிகளில் புதிதாக சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. மாநில அரசுக்கு நிதிச் சுமை இருந்த போதும் கோவை மாநகராட்சிக்கு சாலை மேம்பாட்டுக்காக ரூ.100 கோடிக்கு மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவை நான் சந்தித்த போது, தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடி யாக சிறப்பு நிதிகளை பெற்றுக்கொண்ட மாநக ராட்சி கோவை தான் என்றார். அந்த அளவிற்கு கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவைக்கு வந்தபோது, கோவை மக்கள் சட்டமன்ற தேர்த லில் திமுகவை புறக்கணித்து இருந்தாலும், கோவையை தமிழ்நாட்டில் மிக முக்கிய அங்கமாக கருதி வளர்ச்சிப் பணிகளை செய் வோம் என்றார்.
அவர், அறிவித்தது மட்டுமில் லாமல், அதிகப்படியான வளர்ச்சி திட்ட பயணி களை கோவையில் செய்திருக்கிறார். பொது வாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு 6 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு சுமார் 5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் மேம் பாட்டு நிதிக்கு 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க கோவை மாநகராட்சியின் 12ஆவது வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து வைத்துள்ள மாமன்ற உறுப்பினர் கிடைத்துள்ளார். அதனால் தான் இந்த வார்டில் மட்டும் சுமார் 9 கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு களப்பணி யாற்றுபவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். அந்த வகை யில், இந்த வார்டின் மாமன்ற உறுப்பினர் வி. இராமமூர்த்தி மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை போராடிப் பெற்றுக் கொடுத் துள்ளார். இந்த வார்டு மட்டும் அல்லாது அனைத்து வார்டுகளிலும் மக்களுக்கான நலத்திட்ட பணி கள் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும். இந்திய அரசியலில் நல்ல மாற்றம் ஏற்பட எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். அதற்கான பணி களை முன்னெடுக்க வேண்டும், என்றார். முன்னதாக இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான யு.கே. வெள்ளியங்கிரி, கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், காங்கிரஸ் கட்சி யின் மாவட்டச் செயலாளர் மயில்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்எஸ்குளம் இடைக்குழு செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.