கோவை, நவ.1- மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் தாலுக்கா அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை நாடி தகவல் களைப் பெற்றுக் கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரி வித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட கணியூர் ஊராட்சியில் உள்ளாட்சி தின விழாவையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு, கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி தலைமை ஏற்றார். இதில் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி சிறப்பு மேற் பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கணியூர் ஊராட்சி சார்பில் சிறப்பு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. ஊராட்சி யில் சிறப்பாக செயலாற்றிய தூய்மைப் காவலர்களை மாவட்ட ஆட்சியர் கௌர வித்தார். முன்னதாக, சிலர் மகளிர் உரிமை தொகை வர வில்லை என முறையிட் டனர். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திட் டங்கள் வழங்கப்பட்டு வரு கிறது. தற்போது கிராமங் களுக்கான திட்டங்கள் அதிக ரித்துள்ளது. குறிப்பாக, கூட்டு குடிநீர் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வரு கிறது. நிலத்தடி நீர் மட் டத்தை அதிகரிக்க மழைநீர் சேமிப்பு திட்டங்கள் மேம் படுத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறு வனங்களில் நிலத்தடி நீரை சேமிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், கணியூர் பஞ்சாயத்தில் பொன்னாண் டாம் பாளையம் கிராமத்தை இணைக்க விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும். மேலும், சூலூர் வக்பு வாரிய நிலம் குறித்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப் படும், வருவாய்த் துறை மூலம் அதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்றார். கிராம சபை கூட்டத்தில், சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வி.பி.கந்த சாமி மற்றும் அரசு அலுவ லர்கள் ஊராட்சி மன்ற உறுப் பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.