ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் சமூக வலைதள பக்கத்தில் மோடியுடன் தான் எடுத்துக் கொண்ட படம் பேசு பொருளாகியுள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களத்தில் இருப் பவர் அசோக்குமார். 60க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளரான இவர், திடீரென அரசிய லில் குதித்தார். ஆற்றல் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி மலிவு விலை உணவகம், கோவில்கள் புணரமைப்பு உள் ளிட்ட பணிகள் செய்து வந்தார். பாஜக வில் மாநில அளவிலான பொறுப்பில் செயல் பட்டு வந்த இவர், திடீரென அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இணைந்த கையோடு நாடாளுமன்ற வேட்பாளராக வும் அறிவிக்கப்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவரது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடப் பட்டுள்ள புகைப்படங்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளன. குறிப்பாக தனது தாயாருடன் மோடியைச் சந்தித்து எடுத் துக் கொண்ட புகைப்படம் பலரிடம் பரவி வருகிறது. அதில், “இன்று மாண்புமிகு பிர தமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள், எனது சமூக கட்டுமானப் பணிகளானது தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை வெல் வதற்கு முக்கிய உந்துதலாக இருக்கும் என பாராட்டினார். அதிமுக - பாஜக கள்ள கூட் டணிக்கு இதுவும் ஒரு சாட்சி. ஆற்றல் அசோக்குமாருக்கு அளிக்கும் வாக்கு பாஜகவிற்கு அளிக்கும் வாக்கே என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.