districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கோட்டாட்சியர் ஆய்வு

உடுமலை, ஜன.11-  கனமழையால் மலைவாழ் மக்கள் குடியி ருப்புகளில் 111க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் இடிந்தது குறித்து 11 ஆம் தேதி தீக்க திர் நாளிதழில் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து வியாழனன்று உடுமலை வரு வாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண் டார்.  உடுமலை பகுதியில் கடந்த சில நாட்க ளாக பெய்த கனமழைக்கு திருமூர்த்திமலை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியி ருப்பு பகுதியில் உள்ள வீடுக ளின் சுவர்கள் இடித்து உள் ளது குறித்து தீக்கதிர் நாளி தழ் செய்தி வெளியிட்டது. இதைதொடர்ந்து, 11 ஆம் தேதி வியாழக்கிழமை உடு மலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த்  கண்ணன் திருமூர்த்திமலை மலைவாழ் மக் கள் குடியிருப்பு பகுதியில் இடிந்த வீடுகளை  ஆய்வு செய்தார். வெள்ளிக்கிழமை காலை யில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வரு வாய் ஆய்வாளர் குடியிருப்பு பகுதியில்  ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளனர்.