அன்னூர், மே 22-
அன்னூரில் குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து சிக் னல் பயன்பாட்டில் இல்லாததால் நீலகிரி கோடை விழாவை கண்டுகளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் நெரிசலில் சிக்கி தவித்தனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களின் நுழைவு வாயிலாகவும், தமிழக - கர்நாடகா மாநில எல்லைப் பகுதியாகவும் அன்னூர் இருந்து வருகிறது. அத்திக்கடவு - அவிநாசி திட்டம், திருப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடைந்தும், சாலைப்பணிகள் சீர மைக்கப்படாத காரணத்தால், சாலைகளில் ஆங்காங்கே குழி கள் தோண்டப்பட்டு குண்டும்,
குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக, மேட்டுப்பாளையம் சாலை, கோவை சாலை, சத்தி சாலை, அவிநாசி சாலைகளில் சுமார் 3 கிமீ தொலைவிற்கு வாக னங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் நகரை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்தை ஒழுங்கமைக்க அமைக்கப்பட்ட சிக்னல் பயன் பாட்டில் இல்லாததால் கோடை விழாவை ரசிக்க உதகை செல்லும் சுற்றுலா பயணிகள் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
போக்குவரத்தை ஒழுங்கமைப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட சிக்னல் தற்போது வரை செயல்பாட்டுக்கு வராததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர். அன்னூர் நகரப்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலை களை விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தும் வாகன ஓட்டிகள், காட்சிப்பொருளாக இருக்கும் சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியு றுத்தி உள்ளனர்.