தார் சாலை இல்லா அவலம்: ஜல்லி கொட்டி 6 மாதம் ஆகியும் தாமதம்
சேலம், பிப்.28- தார் சாலை அமைக்க, ஜல்லி கொட்டி ஆறு மாதங்கள் ஆகியும் சாலை அமைக்காததால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியில் சாலை இல்லாததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஸ்தூரிபட்டி பேருந்து நிலையத்திலிருந்து எல்லக்குட்டி வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப் பட்டது. கடந்த அக்டோபர் மாதம் பணிகள் துவங்கி சாலை அமைப்பதற்காக முதலில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. இந்நிலையில், ஜல்லி கொட்டப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் பாதிப்படைந்து வருகின்றனர். குறிப்பாக, அந்த வழியாக நாள்தோறும் செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிளில் இருந்து கீழே விழுவ தும், இரு சக்கர வாகனத்தில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, உடன டியாக அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என, அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் சுற்றி வரும் யானைக் கூட்டம்: மக்கள் அச்சம்
குடியிருப்பு பகுதியில் சுற்றி வரும் யானைக் கூட்டம்: மக்கள் அச்சம் நீலகிரி, பிப்.29- உதகை அருகே உள்ள அறையட்டி கிராம சுற்றுவட்டாரப் பகுதியில் மீண்டும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், 65 சதவீதம் வனப்பகுதியை கொண் டுள்ளதால் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வாறு வசித்து வரும் வனவிலங்குகள், அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனப்பகுதியை ஒட்டி யுள்ள விவசாய நிலங்களுக்கும் புகுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குன்னூர் பகுதியில் முகா மிட்டிருந்த காட்டு யானைகள் ஒரு வழியாக இடம் மாறி, அறையட்டி கிராமத்திற்குள் புகுந்தது. அங்கு, குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு புகுந்த யானைகள், விவசாய நிலங்களில் இருந்த காய்கறி களை சேதப்படுத்தின. அதுமட்டுமின்றி, யானை தாக்கி லட்சும ணன் என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், 7 குழுவாக பிரிந்து யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தும், யானைகள் அறையட்டி, கெரடாலீஸ் பகுதி யில் சுற்றி வருவதால், அப்பகுதி பொதுமக்கள் அச்சம டைந்து உள்ளனர். இந்நிலையில், யானைகளை உடனே விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு
வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு சேலம், பிப்.28- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம், ஓய்வூதியர் சங்கம், பொதுத்துறை சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் செய்ய விதித்திருத்த அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், மத்திய மாநில பொதுத்துறை சங்கங்களின் கூட்ட மைப்பு இணைந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, தரும புரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆதரவு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் நகராட்சி சாதாரணக் கூட்டம்
நாமக்கல், பிப்.28- பள்ளிபாளையம் நகராட்சிக்கான சாதாரண கூட்டம் புதனன்று நடைபெற்றது. இதில், வார்டு வளர்ச்சி பணிக ளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவ லக கூட்டரங்கில் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அதிமுக ,திமுக உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்து பேசினர். இதனைத் தொடர்ந்து, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பழைய மின்கட்டணத்தையே செலுத்தலாம்: தாராபுரம் கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு
பழைய மின்கட்டணத்தையே செலுத்தலாம்: தாராபுரம் கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு திருப்பூர், பிப்.28- அக்கரைபாளையம், தெற்கு குண்டடம் மின்வாரிய அலு வலகத்துக்குட்பட்ட மின்நுகர்வோர் பிப்ரவரி மாதத்துக்கு பழைய மின்கட்டணத்தையே செலுத்தலாம் என்று மின்வாரி யம் அறிவித்துள்ளது. இது குறித்து தாராபுரம் கோட்ட செயற்பொறியாளர் அலு வலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது, தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட அக்கரை பாளையம் பிரிவு, தெற்கு குண்டடம் பிரிவு மின்வாரிய அலுவ லகத்தில் நிர்வாகக் காரணங்களால் நடப்பு பிப்ரவரி மாதத்துக் கான மின் கணக்கீடு மேற்கொள்ள முடியவில்லை. எனவே, அக்கரைபாளையம் மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட மின்நுகர்வோர் கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணத் தையே பிப்ரவரி மாதத்துக்கும் செலுத்த வேண்டும். தெற்கு குண்டடம் மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட மின்நுகர் வோர் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் செலுத்திய மின்கட் டணத்தையே பிப்ரவரி மாதத்துக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி பேரூராட்சி பகுதியில் அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தல்
அவிநாசி, பிப்.28- அவிநாசி பேரூராட்சி பகுதிக ளில் 18 வார்டுகளுக்கு உண்டான அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று நல்லது நண் பர்கள் அறக்கட்டளை கூறியுள் ளது. இது குறித்து அவிநாசி பேரூ ராட்சி செயல் அலுவலருக்கு அனுப் பியுள்ள மனு: சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் அவிநாசி பேரூ ராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க வேண்டும், உணவு பாது காப்பு என்பதை உறுதி செய்ய மூன்று மாதத்திற்கு ஒரு முறை பேரூராட்சி பகுதியில் உள்ள உண வகங்கள் மற்றும் இறைச்சி கூடங் களில் உணவு தர பரிசோதனை செய்ய வேண்டும், பேரூராட்சி நிதியில் அரசு மருத் துவமனையில் அமைக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் தங் குமிடத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் திடக்கழிவு மறுசுழற்சி இடத்தை பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும். பேரூ ராட்சி பார்க்கிங் இல்லாத மண்டபங் களுக்கு அபராதம் வசூலிக்க வேண்டும் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும், சாலைப்பாளையம் முதல் பால சந்தர் மருத்துவமனை வரை இருபு றமும் கழிவு நீர் கால்வாய் உரு வாக்க வேண்டும், வ.உ.சி பூங்கா வில் இரண்டு வருடங்களாக பூட்டி வைத்திருக்கும் பொதுக்கழிப்பி டத்தை மக்களுக்கு திறந்து விட வேண்டும், கால்நடை மருத்துவ மனை அருகே கடுகாட்டில் குப்பை களை அகற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும், வார்டு எண் 9-ல் பாதியில் நின்று போன சமுதாய நலக்கூ டத்தை மீண்டும் அமைக்க வேண் டும், சாலையோர வியாபாரிகள் பிச் சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண் டும், குடிசைமாற்று வாரிய குடியி ருப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க வேண்டும், குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராம ரிப்பு போன்ற அடிப்படை தேவை களை உடனடியாக செய்து தர வேண்டும் இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொது மக்களை திரட்டி போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக தெரி வித்துள்ளனர்.
சாலையை மீட்டுத்தரக் கோரிக்கை
சாலையை மீட்டுத்தரக் கோரிக்கை திருப்பூர், பிப்.28- திருப்பூரில் ஆக்கிரமிப்பில் உள்ள சாலையை மீட்டுத்தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்த னர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்.எஸ்.நகர் அம்பேத் கர் காலனி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ள தாவது, தமிழக அரசு கடந்த 1979 ஆம் ஆண்டு கொங்கு பிரதான சாலையில் அம்பேத்கர் காலனிக்கு சுமார் 40 அடி திட்டச் சாலையை உள்ளூர் நகர திட்டக் குழுமத்தால் ஏற்ப டுத்தி கொடுத்தது. ஆனால், இந்தப் பகுதியில் குடியி ருக்கும் மற்ற சமூகத்தைச் சோ்ந்தவர்கள் 40 அடி சாலையை ஆக்கிரமித்துள்ளதால், தற்போது சாலை 10 அடியாக குறு கிவிட்டது. எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள சாலையை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் பாதாள சாக்கடை திட்டம் பணி நிறைவடைவது எப்போது?
திருப்பூர் பாதாள சாக்கடை திட்டம் பணி நிறைவடைவது எப்போது? திருப்பூர், பிப்.28 - திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணி முழுமையடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்று மேயர் ந.தினேஷ்குமார் பட்ஜெட் உரையில் கூறியிருக் கிறார். அம்ருத் திட்டத்தில் முதல்கட்டமாக ரூபாய் 636.40 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இரண்டாவது கட்ட மாக 45, 46, 48, 49, 55, 56 மற்றும் ஆகிய வார்டு பகுதிகளில் ரூபாய் 188.61 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள நிர் வாக அனுமதி பெறப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள் ளது. மேலும் மூன்றாம் கட்டமாக நல்லூர் மற்றும் வீரபாண்டி பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார். திடக்கழிவு மேலாண்மை அதேபோல் திருப்பூர் மாநகராட்சியில் நேரடியாக குப் பைகளை பெற்று விஞ்ஞானபூர்வமாக உரமாக்கல் செய்து சுகாதாரம் பேணிக் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 200 டன் இயற்கை எரிவாய் உற்பத்தி செய்ய நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மேயர் தினேஷ் குமார் தெரிவித்தார்.
தென்னையை தாக்கும் வேர்வாடல் நோய் வேளாண்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
கோவை,பிப். 28- பொள்ளாச்சி வட்டாரத்தில் அதிகரித்து வரும் தென்னை வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னைகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர் செல்வம் நேரில் ஆய்வு செய்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரத்தில் அதிக ரித்து வரும் தென்னை வேர்வாடல் நோயால் பாதிக்கப் பட்ட தென்னைகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட் சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் பார்வையிட்டனர் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தென்னை வேர் வாடல் நோய் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், வேளாண்மை உழவர் நலத் துறை முதன்மை செயலாளர் செல்வி அபூர்வா, தோட்டக் கலை மற்றும் மலைபயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, தென்னை வாடல் நோய் குறித்தும் நோய் தாக்குதல் இருந்து தென் னையை காக்கும் முறைகளை விளக்கினார். இக்கருத்த ரங்கில் பங்கேற்ற விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தென்னை வாடல் நோய்களை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத் துவதோடு பாதிக்கப்பட்ட தென்னைகளை ஆய்வு செய்து சமந்தபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்யவும் அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக தெரிவித் தார். முன்னதாக பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் தென்னை வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயி சுப்பிரமணியம் என்பவர் தென்னைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் கோரிக்கை
பொதுமக்கள் கோரிக்கை கோபி,பிப். 28- ஈரோடு, கோபிசெட்டி பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக மேல்நிலை தொட்டி ஒன்று செயல்பட்டு வருகி றது. இதனை அலுவலகப் பணியாளர்கள், ஊராட்சி ஒன்றியக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் என பலர் தொட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலை யில், இக்குடிநீர் தொட்டி யில் குப்பைகள் விழுந்து அசுத்தமாக இருந்து வருகி றது. இதனால், குடிநீரை குடிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியினை, உட னடியாக சுத்தம் செய்து சுகாதாரமாக மாற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.