districts

img

பணவீக்கம், வேலைவாய்ப்பு என்ற ஒரு வார்த்தைகளும் இல்லை பாஜகவின் ஒன்றிய பட்ஜெட் ஏமாற்று வேலை: க.கனகராஜ் சாடல்

கோவை, பிப்.12- ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்த  பட்ஜெட்டில் பனவீக்கம்,  வேலைவாய்ப்பு என்கிற வார்த்தைகளை ஓரிடத்தில் கூட குறிப் பிடாமல் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கார்ப்ரேட்டுகளின் களவானித்தனத்திற்கு துணை போகும் ஒன்றிய பாஜக அரசிடம் இருந்து தொழில்முனைவோர்கள் போரா டித்தான் தொழில்களை பாதுகாக்க முடியும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் உரையாற்றினார்.  கோயமுத்தூர் எம்.எஸ்.எம்.இ. அசோசி யேசன் அமைப்பு துவக்க விழா நிகழ்ச்சியும், இந்திய பொருளாதாரம் கார்ப்பரேட் கையிலா? இந்திய மக்கள் கையிலா? என்ற  ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஆய் வுரை நிகழ்வு கோவை, ராம் நகர் பகுதி யிலுள்ள சுபஸ்ரீ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோயமுத்தூர் சிறு, குறு தொழில் முனைவோர் அசோசியேசன் பி.சக்திவேல் தலைமை வகித்தார். கே. பாண்டியன் வரவேற்றார். இந்த அமைப்பி னுடைய கன்வீனராக இருந்த கிருஷ்ண சாமி மற்றும் கோயமுத்தூர் கம்பரசர்  இன்டஸ்ட்ரி அசோசியேசன் தலைவர்  ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றி னர். இதைத்தொடர்ந்து அமைப்பின்  தலைவராக தி.மணி, செயலாளராக கே.பாண் டியன், பொருளாளராக விஸ்வநாதன் மற்றும் துணைத்தலைவர்கள், செயலாளர்கள் உட் பட 18 பேர் கொன்ட நிர்வாகக்குழு தேர்வு  செய்யப்பட்டது. இதன்பின் அமைப்பின் புதிய தலைவர் தி.மணி, கடந்த கால நடவ டிக்கைகள் சிலவற்றை கூறியதோடு, இனி  வரும் காலங்களில் சங்கத்தின் உறுப்பி னர்களுக்கு மாணியம் பெற்றுத்தருவதற் கான முயற்சிகளை முழுமைக்கும் இலவச மாக செய்யப்படும் என்றும், மாவட்ட தொழில் மையத்தில் ஊழலற்ற நிர்வாக முறைகளை உருவாக்க முயற்சி செய்யப்படும் என தெரி வித்தார்.

இதைத்தொடர்ந்து இந்திய பொருளாதா ரம் கார்ப்பரேட் கையிலா? இந்திய மக்கள் கையிலா? என்ற ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஆய்வுரை குறித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் க.கனகராஜ் உரையாற்றுகையில், பண வீக்கம்,  வேலைவாய்ப்பு என்கிற வார்த்தை களை ஓரிடத்தில் கூட குறிப்பிடாமல் இந்த  ஆண்டு பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது. பல்வேறு ஆய்வுகளை நடத்தி அரசு சராசரிகளை தெரிவிப்பதை கைவிட்டுவிட்டது என்பதே உண்மை. தனி யார் அமைப்பின் கணக்கெடுப்புகளின் குறிப்புகளை தான் அரசு தன்னுடைய ஆய்வு களுக்காக பயன்படுத்திக்கொள்கிறது. நடப் பாண்டில் கூடுதலாக 8.3 சதவிகிதம் வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. அரசு வேலைவாய்ப்பின் புதிய வாய்ப்புகள் எந்த  இடத்திலும் தோன்றுவதாக அறிகுறிகளே கிடையாது. ஆனால்,  வருமான வரியில் விளக்கு அளித்திருப்பதாக கூறுவது ஏமாற்று வேலையாகும். வருமானம் பெறுபவர்களில் 94 சதவிகிதம் பேர் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக வருமானம் பெறுபவர்கள். வரு மானவரி என்பதை பற்றி எந்த யோசனையு மற்றவர்களாக அவர்கள் (ஒன்றிய அரசு) உள்ளனர்.

விவசாயத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி வரை கடன் மற்றும் மானிய உதவிகள் செய்ய வதாக அறிவித்திருப்பது, தற்போது நவீன ஏமாற்று வேலை. கடந்த காலத்தில் உறுதிய ளித்த அறிவிப்புகளையே இதுநாள் வரை முழுமையாக அரசு வழங்கியதில்லை. மாறாக வரி விதிப்பதில் வைரத்திற்கு 1.5 சத விகிதம், தங்கத்திற்கு 3 சதவிகிதம், அரிசிக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது யாருடைய நலனை பாதுகாக்க என கேள்வி  எழுப்பினார். வரி செலுத்துபவர்களில், 94  சதவிகிதம் பேர் ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறு, குறு தொழில் புரிபவர்களாகும். கடன் பெறுவதற்கான வரன்முறைகளை ரிசர்வ் வங்கி நடைமுறைகளிலிருந்து திருத்தம் செய்து, தங்களுக்கு இலக்கை நிர்ணயம் செய்து கொள்கிறது. அந்த நடைமுறையை  மாநில அரசுகள் எடுத்துக்கொள்ள முடி யாது என்கிறது. மாநில அரசுகள் வெளிப் புற சந்தைகளிலும் கடன் வாங்க ஒன்றிய  அரசு தடைவிதிக்கிறது. வட்டி விகிதங்களில் கூட சிறு, குறு தொழில் புரிபவர்களுக்கு எந்த சலுகையும் அரசு கருணைகாட்டுவது கிடை யாது. ஆனால் வேலைவாய்ப்புகள், அரசுக் கான வரி வருவாய் என மிகப்பெரிய பங்க ளிப்பை செலுத்துவது சாதாரண மக்களும், சிறு, குறு தொழில் புரிபவர்களே. இந்த  அமைப்பு எளிதில் தங்களுடைய கோரிக்கை களை வென்றெடுக்க முடியாது. போராடி கார்ப்பரேட்களிடமிருந்து தேசத்தையும், தங்களையும், தொழிலையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்றார். இறுதியாக சங் கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் அருள் பிர காஷ் நன்றி கூறினார்.