districts

img

திருப்பூர் நூல் விலையில் மாற்றமில்லை

திருப்பூர், ஜன. 1- புத்தாண்டில் நூல் விலையில் மாற் றமில்லை எனவும், கடந்த மாத  விலையே தொடரும் என நூற்பாலை கள் அறிவித்துள்ளது.  பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக் கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய் யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத் தில் கொண்டு, ஆடைகளின் விலையை  வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர் கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடை கள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.  நூல் விலை சீராக இருந்தால், வர்த்த கம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக் கும். ஆனால் நூல் விலை அடிக்கடி  மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறை யினர் பல்வேறு பிரச்சினைகளை சந் தித்து வருகிறார்கள். ஏற்கனவே போடப் பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடை களின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலை யில் பனியன் தொழில் நடந்து வருகி றது. இதற்கிடையே நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இரு முறை அறிவித்து வருகின்றனர். அதன்படி நடபாண்டில் முதல் மாதத் திற்கான நூல் விலையை நூற்பாலை கள் திங்களன்று (இன்று) அறிவித்த னர். இதில் நூல்களில் எந்தவித ஏற்ற மும் இறக்கமும் இன்றி கடந்த மாத நூல் விலையை தொடரும் என அறி வித்துள்ளனர். அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர்  ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும்,  24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம் பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க் கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது  நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும்,  24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம் பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க் கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற் பனை செய்யப்பட்டு வருவது குறிப்பி டத்தக்கது.