கருப்பு சேர்வை கொங்கு நாட்டு ஓடாநிலை கோட்டை பாளையக்காரர் தீரன் சின்ன மலையிடம் சேர்ந்து பிரிடிஷ் காரர்களுக்கு எதிராக யுத் தம் செய்தவர். தீரன் சின்னமலையிடம் வசூலிக்க வந்த சங்ககிரி திவான் மீராசாகிப்பின் படை வீரர்களை கருப்பசேர்வை விரட்டியடித்தார். மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கூட்டணி சேர்ந்து, சின்ன மலை மற்றும் கருப்பு சேர்வை, ஆங்கிலேய கம் பெனி ஆட்சிக்கு எதிராக பெரும்படை திரட்டிப் போரிட் டனர். ஆங்கிலேய கம்பெ னிப் படைகளுக்கு எதிராக, 1801 ஆம் ஆண்டில் ஈரோடு காவிரிக் கரையிலும், 1802 ஆம் ஆண்டில் ஓடாநிலைக் கோட்டையிலும், 1804 ஆம் ஆண்டில் அரச்சலூரிலும் நடந்த போர்களில் கருப்பு சேர்வை தலைமையிலான தீரன் சின்னமலை படைகள் பெரும் வெற்றி பெற்றன. கள்ளிக் கோட்டையிலி ருந்து பெரும் அளவில் வந்த ஆங்கிலேய பீரங்கிப் படை கள் ஓடாநிலைக் கோட்டை யைத் தகர்த்து, சின்னமலை யுடன் கருப்பு சேர்வை கைது செய்த, ஆங்கிலேயப் படை கள் சங்ககிரிக் கோட்டையில் இருவரையும் 1805 அன்று தூக்கிலிட்டனர்.