districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: காவல் கண்காணிப்பு அறை அமைக்கும் பணி தீவிரம்

திருப்பூர், நவ. 28 - தீக்கதிர் செய்தி எதிரொலியாக முதலிபாளையம் ஹவு ஸிங் யூனிட் பகுதியில் காவல் கண்காணிப்பு அறை அமைப் பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் முதலிபாளையம் பஞ்சா யத்து ஹவுசிங் யூனிட் பகுதியில் செயல்படாத பள்ளிக் கட்டி டத்தில் போதைப் பொருட்கள் உபயோகிப்பது, திருட்டு  பொருட்கள் பதுக்கி வைப்பது போன்ற சமூக விரோத செயல் பாடுகள் நடைபெறுவதால், இங்கு காவல் கண்காணிப்பு அறை அமைக்க வேண்டும் என தீக்கதிர் நாளிதழ் கடந்த  நவ.24ஆம் தேதி செய்தி வெளியிட்டது. இந்த செய்தியின் எதி ரொலியாக ஹவுசிங் யூனிட்டில் 24 மணி நேரம் கண்காணிக்கும்  வகையில், காவல் கண்காணிப்பு அறை அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. முதலிபாளையம் பஞ்சாயத்து நிர்வா கத்தினர் இதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சில  நாட்களுக்குள் இந்தக் கட்டிடம் ஊத்துக்குளி காவல் நிலையத் திற்கு ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்ப குதி மக்கள் தீக்கதிர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.