கோவை, அக். 8 - திருக்குறளை அரைகுறை யாய் புரிந்து கொண்டு பேசுவது வள்ளுவனுக்கு அநீதி இழைப்ப தாகும் என்கிற முழக்கத்தோடு கோவையில் வாலிபர் சங்கத்தினர் ஆளுநருக்கு அஞ்சல் துறையின் மூலம் திருக்குறள் நூலை அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டது அனைவரது கவனத் தையும் ஈர்த்துள்ளது. சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நாடு வளர்ச்சி அடைய பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் ஆன் மிக ரீதியாகவும் வளர்ச்சி அடைய வேண்டும். திருக்குறள் ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து பேசும் நிலையில் அரசியலுக்காக இதனை வெறும் வாழ்க்கை நெறி முறை புத்தகம் என கூறுகின்றனர் என பேசினார். கடவுள் அதிகாரமே இல்லாத திருக்குறள் நூலை முழுமையாக வாசிக்காமல், அரைகுறையாய் வாசித்து ஆன்மீகம், சாஸ்திரம் என கருத்து சொல்வது வள்ளு வனுக்கு இழைக்கும் அநீதியாகும் என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஆளுநர் ஆர்.என். ரவி திருக்குறளை முழுமையாக வாசிக்க வேண்டும் என்கிற கோரிக் கையோடு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழகம் முழு வதும் ஆளுநருக்கு திருக்குறள் புத்தகங்களை அனுப்பும் பேராட் டத்திற்கு அறைகூவல் விடுத்தனர். இதன் ஒரு பகுதியாக, கோவை யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை முழுமையாக திருக் குறளை படிக்க வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர். இதனை யடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று திருக்குறள் புத்தகங்களை அஞ்சல் துறையின் மூலம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் நூதன போராட் டத்தில் ஈடுபட்டனர். வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட செய லாளர் அர்ஜூன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத் தின் மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா உள்ளிட்ட திரளான இளை ஞர்கள் பங்கேற்றனர். முன்னதாக, வாலிபர் சங்கத்தினர் ஆளுநருக்கு திருக்குறள் நூல் அனுப்பும் போராட்டம் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த் துள்ளது.