தருமபுரி, ஜூலை 30- கொண்டகர அள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்குமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை அமைப்புக் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், கொண்டகர அள்ளியில் வாலிபர் சங்க கிளை அமைப்புக் கூட்டத்திற்கு, வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் குறளரசன் தலைமை ஏற்றார். கொண்டகர அள்ளி கிராமத்தில் விளை யாட்டு மைதானம், உபகரணங்கள் வழங்க வேண்டும். நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு ஏற்றவாறு புத்தகங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். அரசு துறைகளில் உள்ள பத்தா யிரத்திற்கு மேற்பட்ட எஸ்பி,எஸ்டி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், கொண்டகர அள்ளி கிளைத் தலைவராக தினேஷ்குமார், செய லாளராக டெண்டுல்கர், பொருளாளராக சசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத்தலைவர் தி.வ.தனுஷன், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் குப்பன், வட்டக்குழு உறுப்பினர் கருணாகரன், இந்திய மாணவர் சங்கத்தின் வட்ட அமைப் பாளர் தீனா உள்ளிட்ட திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.