உதகை, மார்ச் 14- குண்டும், குழியுமான சாலையை சீர மைக்கக்கோரி வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், நாடுகாணி முதல் கீழ் நாடுகாணி வழியாக கேரள எல்லை வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனை சீர் செய்திடக்கோரி தொடர்ந்து வாலி பர் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், சாலையை செப்பனிடாத நெடுஞ்சாலைத் துறை கடமைக்கு என சாலையில் மண்ணை மட்டும் போட்டு விட்டு சென்றுள்ளனர். இத னையடுத்து, மண்ணிட்டு மூடிய சாலைகளில் விதை விதைக்கும் போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மேற்கொண் டனர். பந்தலூர் ஏரியா கமிட்டி சார்பாக நடை பெற்ற இப்போராட்டத்திற்கு செயலாளர் ராசி. ரவிக்குமார் தலைமை ஏற்றார். முன்னதாக, நாடுகாணி பஜாரில் ஊர்வலாமாக சென்ற வர்கள் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் ஏரியா கமிட்டி தலைவர் பெரியார் மணிகண்டன், பொருளாளர் செரீப் உள்ளிட்ட திரளான இளைஞர்கள் பங்கேற்ற னர். போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கட்சியின் ஏரிய கமிட்டி தலைவர்கள் உரை யாற்றினர். முன்னதாக, இப்போராட்டம் அப் பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.