districts

img

இளைய தலைமுறையினர் அதிக அளவில் புத்தகங்கள் படிக்க வேண்டும்:திருச்சி சிவா எம்.பி.

திருப்பூர், ஏப்.15- இளைய தலைமுறையினர் அதிக அளவில் புத்தகங்களைப் படிக்க வேண் டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கூறினார். தமிழ் இணையக் கல்விக் கழகத்தின்  சார்பில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமி தத்தையும் உணர்த்தும் வகையில் “மாபெரும் தமிழ் கனவு” என்ற பெயரில்  பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் மாவட் டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் கல் லூரி மாணவர்களிடையே பண்பாட்டு பரப்புரை நிகழ்வு மூன்றாம் கட்டமாக வியாழனன்று புனித வளனார் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ் மரபின் வளமை, பண்பாட்டு  செழுமை, சமூக சமத்துவம், பொருளா தார மேம்பாடு வாய்ப்புகளை இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல் வதற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில்  இந்த பரப்புரை திட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், தமிழ் மரபும் –  நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம் பாடு, சமூகப் பொருளாதார முன்னேற் றம், மொழி மற்றும் இலக்கியம், கலை  மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வு கள், அறிவியல் மற்றும் தொழில்நுட் பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி  ஆகிய தலைப்புகளின் கீழ் சொற்பொழி வுகள் நடத்த திட்டமிடப்பட்டு செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  திருப்பூர் புனித வளனார் மகளிர் கல்லூ ரியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், “படிப்போம் நிறைய....” என்ற தலைப்பில் நாடாளு மன்ற உறுப்பினர் திருச்சி சிவா, கற்சி லையும் கட்டடக் கலையும் என்ற தலைப் பில் மக்கள் சிந்தனைப் பேரவை தலை வர் த.ஸ்டாலின் குணசேகரன் ஆகி யோர் கருத்துரை ஆற்றினர். மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் இத்திட்டம் குறித்த  நோக்கவுரை ஆற்றினார்.  படிப்போம் நிறைய  என்ற தலைப் பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது, கல்லூரியில் பெறு கின்ற பட்டம் எதிர்கால வாழ்க்கை யில் தன்னிறைவு பெறுவதற்கும், தங் களுடைய தேவைகைளை நிறை வேற்றுவதற்கு ஒரு நல்ல பணியில் அமர் வதற்கும் பயன்படும். பாடத்திட்டங்க ளுக்கு அப்பாற்பட்டு அதிகப்படியான இலக்கியங்களை, வரலாற்றினை, விஞ் ஞான ஆராய்ச்சி மூலமாக கிடைக்கின்ற  அதிசயங்களை தெரிந்து  கொள்ள அதி கம் படிக்க வேண்டும். 

இன்றைய காலக்கட்டத்தில் தகவல்  தொழில்நுட்ப வளர்ச்சியினால் அனைத்து வகையிலும் எளிதாக கற்றுக் கொள்ளப்படுகிறது. இங்கு இருக்கும் மாணவ, மாணவியர்கள் எல்லாம் வெளி நாடுகளுக்கு செல்லாமல் இந்தியா வில் இருக்கக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க சுவடிகளை படித்து வரலாற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பயன்பெற  வேண்டும். மாணவ செல்வங்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்று நாங்கள் பேசி யதை மனதில் வைத்துக் கொண்டு ஒரு  பக்கத்தில் நீங்கள் என்ன கேட்டீர்கள் என்று எழுதுங்கள். இப்படி நீங்கள் எழுத, எழுத நீங்களும் ஒரு காலத்தில்  எழுத்தாளராகலாம். மாணவ, மாணவி யர்களாகிய நீங்கள் வரலாறு நினைக்க கூடிய அளவிற்கு ஒரு பெரிய இடத்திற்கு  வர வேண்டும். எனவே இளைய தலை முறையினர் அதிக அளவில் புத்தகத்தை  படியுங்கள். தமிழ் மரபை எந்த ஒரு  தொழில்நுட்ப முன்னேற்ற போக்காலும்  மறந்து விடக்கூடாது என்று பேசினார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் எல்.ஆர்.ஜி மகளிர் கல்லூரி, திருப்பூர் சிக் கண்ணா அரசு கலைக்கல்லூரி, பல்ல டம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை  அறிவியல் கல்லூரி, தாராபுரம் அரசு  கலை அறிவியல் கல்லூரி, திருப்பூர் பார்க்ஸ் கல்லூரி, சசூரி கலை அறிவி யல் கல்லூரி, செயிண்ட் ஜோசப் கலை  அறிவியல் கல்லூரி, திருப்பூர் குமரன்  மகளிர் கல்லூரி மற்றும் டெர்ஃப் கலை  அறிவியல் கல்லூரி என மொத்தம் 9  கல்லூரிகளை சார்ந்த 1150க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  மாணவ, மாணவியர்கள் அனைவருக் கும் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி வழிகாட்டுதலுக்கான கையே டும், தமிழ்ப் பெருமிதம் என்கின்ற கையேடும் வழங்கப்பட்டது. இதில் தமிழ்ப் பெருமிதம் கையேட்டில் உள்ள  ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள தகவல்  குறித்து ஒரு நிமிடத்தில் தங்களுடைய சிறப்பான கருத்துக்களை தெரிவித்த மாணவ, மாணவிகளை பாராட்டி பெரு மித செல்வன் மற்றும் பெருமிதச் செல்வி  என்கின்ற பட்டத்தோடு பரிசுகள் வழங் கப்பட்டன. 

இந்நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத் தில் கலந்து கொண்ட மாணவ, மாணவி யர்கள் பயன்பெறும் வகையில் மாண வர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும்  உயர் கல்வி வழிகாட்டல் குறித்த கண் காட்சி, நான் முதல்வன் திட்டம் குறித்த  கண்காட்சி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பிலும், இதர கடன்  உதவிகள் தொடர்பான கண்காட்சி மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தாட்கோ நிறுவனத்தின் சார்பிலும், புத் தக அரங்குகள் மாவட்ட நூலகத்தின் சார்பிலும், சுயஉதவி குழுக்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண் காட்சி அரங்குகள் சார்பிலும் அமைக்கப் பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், திருப்பூர் சார் ஆட் சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தமிழ்  இணைய கல்வி கழக இணை இயக்கு நர் கோமகன், தனித்துணை ஆட்சியர்  (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிர நாதன், செயிண்ட் ஜோசப் கலை அறிவி யல் கல்லூரி முதல்வர் மேரி ஜோஸ்பின்,  சிக்கண்ணா கல்லூரி முதல்வர் வ. கிருஷ்ணன், பேராசிரியர்கள், கல்லூரி  மாணவ, மாணவியர்கள், துறை சார்ந்த  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார் கள்.