தருமபுரி, பிப்.2- தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் விபத்துகளை தவிர்க்க உயர் மட்ட பாலம் கட்டும் பணி 3 ஆண்டுகளுக் குள் நிறைவடையும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், தொப்பூர் கண வாய் பகுதியில் ஏற்பட்டு வரும் தொடர் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர் களுடனான கலந்தாலோசனைக் கூட் டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலை மையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் விபத்துக்கு பிரதான காரணமான பகுதி, வளை வுகளுடன் கூடிய அதிசாய்வான சாலை பகுதியாக உள்ள காரணத்தால் வாக னங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத் துக்குள்ளாவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, சாலையின் சாய்வினை சரி செய்யும் வகையிலும், விபத்துக்களை நிரந்தரமாக தவிர்க்கும் வகையிலும் சுமார் ரூ.702 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் திட்ட மிடப்பட்டு, ஒப்பந்த புள்ளி கோரப்பட் டுள்ளது. மேலும், பிப்ரவரி மாதம் ஒப் பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, சுமார் 3 ஆண்டு காலத்திற்குள் இப்பணி யினை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக் கப்பட்டது. உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டதின் கீழ், தொப்பூர் கணவாய் மலைப்பகுதி சாலை 6 வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. தற் போது உள்ள சாலையின் ஏற்ற, இறக் கங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்படும். தற்போது உள்ள தருமபுரி - சேலம் இடதுப்புற சாலை மேம்பாலத்துடன், குறுகிய வளைவுகள் இன்றி விரிவாகத்துடன் 3 வழிச்சாலை யாக போக்குவரத்துக்கு எளிதாக்கப் படும். மேலும், தரைவழிப்பாலம் மற்றும் அணுகு (சர்வீஸ்) சாலைகள், மேட்டூர் ஆஞ்சநேயர் கோவில் செல்வதற்கும் மற்றும் ‘யூ’ வளைவுகளும் அமைக் கப்பட உள்ளன.
மேற்கண்ட திட்டப் பணிகளுக்காக தருமபுரி மாவட்டத்தில் 2.7692 ஹெக்டர் நிலமும், சேலம் மாவட் டத்தில் 1.7711 ஹெக்டர் மற்றும் வனத் துறை 13.427 ஹெக்டர் நிலமும் கையகப் படுத்தப்பட உள்ளன. தற்காலிகமாக விபத்து தடுப்பு நடவடிக்கையாக இரட்டை பாலத்தின் (தருமபுரி - சேலம்) இடதுபுற சாலையை சுமார் 5.50 மீட்டர் அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு, இதற்கான திட்ட மதிப்பீடு துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உடனடி யாக பணிகளை துவக்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவு றுத்தியுள்ளார். சாலையின் இடதுபுற இருசக்கர வாகன பாதையினை மேம்படுத்தவும், அகலப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டு, கட்டமேடு பகுதியிலிருந்து இரட்டைப் பாலம் வரை இருசக்கர வாகனம் மற் றும் கனரக வாகனங்கள் தனித்தனியே பிரிந்து செல்ல ‘பொல்லார்ட்ஸ்’ பொருத்த முடிவு செய்யப்பட்டு, பணி களை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், சேலம் திட்ட செயலாக்க அலகு திட்ட இயக்குநர் சீனிவாசலு, சேலம் திட்ட செயலாக்க அலகு மேலாளர் திலீப் வர்மா, நெடுஞ்சாலை இயக்க அலுவ லர் ராம்குமாரன், எல் & டி டோல் பிளாசா இயக்க மேலாளர் அருண்குமார், டோல் பிளாசா சாலை பாதுகாப்பு மேலா ளர் ஞானசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.