districts

img

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்

உடுமலை, டிச.16- சம்பள நிலுவை மற்றும் தொழிலாளர் களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் தொகையை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் முறையாக வருங்கால  வைப்பு நிறுவனத்திற்குச் செலுத்தாததைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு முடிவின்படி வெள்ளியன்று கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடை பெற்றது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, கிருஷ்ணாபுரத்தில் தமிழக அரசின்  அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1960  ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற் போது இந்த ஆலையில் 243 தொழிலா ளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த  தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்க ளாக ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும்  அனைத்து தொழிலாளர்களிடம் பிடித்தம்  செய்யப்பட்ட இபிஎப் தொகை கடந்த 27  மாதங்களாகத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திற்கு செலுத்த வில்லை. கடந்த மாதம் முதல் 50க்கும் மேற் பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு எவ் வித பணப்பலன்களும் வழங்கவில்லை.

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க பல முறை நிர்வா கத்திடம் கோரிக்கை வைத்தும் எவ்வித முன் னேற்றம் இல்லாத காரணத்தால் அனைத்து  தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு சார்பில் டிச.12 ஆம் தேதி முதல் ஆலையின் முன்பு  காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், டிச.13 ஆம் தேதி திருப்பூர்  தொழிலாளர் துணை ஆணையர் அலுவ லகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித  முடிவும் ஏற்படாத நிலையில், கடந்த ஐந்து  நாட்களுக்கு மேல் காத்திருப்பு போராட்டம் நடத்தியும் ஆலை நிர்வாகம் எவ்வித முடி வைத் தெரிவிக்காத நிலையில் வெள்ளி யன்று கஞ்சித் தொட்டி திறக்கும் போராட் டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.  இப்போராட்டம் துவங்கும் போது ஆலை  நிர்வாக அதிகாரிகள் வந்து போராட்டம் நடத் திய தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினனர். இதில்  எவ்வித உடன்பாடும் ஏற்படாமல் போனதால் காத்திருப்பு போராட் டம் நடைபெற்று வருகிறது. மேலும், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் மற்றும் அனைத்து  உரிமைகளும் கிடைக்கவில்லை என்றால்  அனைத்து தொழிலாளர்களின் குடும்பத் துடன் உடுமலை பழனி தேசிய நெடுச்சா லையில் சாலை மறியில் போராட்டம் நடத்தப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.