districts

காவிரியில் மணல் மூட்டைகளை வைத்து தண்ணீர் எடுக்கும் பணி

தருமபுரி, ஏப்.25- ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர் வரத்து குறைந்து வருவதால், குடி நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகை யில் ஆற்றின் குறுக்கே மணல் மூட் டைகளை அடுக்கி வைத்து தண்ணீர்  எடுக்கும் பணி நடைபெற்று வருகி றது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு ஜப்பான் நிதி உத வியோடு தருமபுரி மாவட்டம், ஒகே னக்கல் காவிரியாற்றின் கரையோரத் தில் கூட்டுக்குடிநீா் வாரியத்தின் மூலம் நீர் உறிஞ்சும் நிலையம் அமைக்கப் பட்டது. குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் 11 பேரூராட்சிகள், 251 கிராம ஊராட்சி கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333  கிராம ஊராட்சிகள், மாநகராட்சி - 1, நகராட்சி - 1, பேரூராட்சிகள் - 6 உள் ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் காவிரியாற்றில் இருந்து 181 எம்எல்டி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழை காலங்களில் கர்நாடகா  அணைகளில் இருந்து வெளியேற்றப் படும் உபரிநீரால் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் போதும், வறட்சி காலங் களில் நீர்வரத்து குறைந்து வரும் போதும் காவிரியாற்றில் இருந்து இரு மாவட்ட மக்களுக்கு தேவை யான குடிநீர் எடுக்கும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. இந்த நிலையை சரி செய்யும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக நீர்வரத்து குறையும் போது, ஒகே னக்கல் கூட்டு குடிநீர்த்திட்ட நிலை யத்தின் நீர் உறிஞ்சும் பகுதியின் அருகே காவிரியாற்றின் குறுக்கே தற்காலிகமாக மணல் மூட்டைக ளைக் கொண்டு தடுப்புகள் அமைக் கப்பட்டு, தேவையான தண்ணீரை உறிஞ்சும் பணி நடைபெற்று வந்தது. தற்போது காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 350 கன அடியாக சரிந் துள்ளது. கோடைகாலத்தில் குடிநீர்த்  தேவையைக் கருத்தில் கொண்டு காவிரியாற்றின் குறுக்கே சுமாா் 300க்கும் மேற்பட்ட மணல் மூட்டை களை ஊழியர்களின் மூலம் கடந்த சில நாள்களாக அடுக்கும் பணி நடை பெற்றது. மணல் மூட்டை தடுப்பு களின் மூலம் தண்ணீர் தடுக்கப்பட்டு தாழ்வானப் பகுதியில் உள்ள நீர்  உறிஞ்சும் இடத்திற்கு எளிதில் தண் ணீர் செல்வதால், இரு மாவட்ட மக்க ளுக்குத் தேவையான குடிநீரை சிரம மின்றி எடுக்கப்பட்டு வருகிறது. காவி ரியாற்றில் நீர்வரத்து திடீரென அதிக ரிப்பதும், குறைவதுமாக உள்ள தால், தண்ணீர் எடுக்கும் பணிக்கு எவ் வித தடையும் இருக்காது. கோடை காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் போதுமான  அளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட் டுள்ளதாக கூட்டுக்குடிநீர் திட்ட  நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.