பள்ளிபாளையம், ஜூன் 9- பள்ளிபாளையம் நக ராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கிறது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நக ராட்சி பகுதியில், குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற் கொள்ளும் வகையில் ரூ. 17.77 கோடி மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக சோதனை ஓட்டம் புதனன்று நடைபெற்றது. அதனை பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பால முருகன், நகராட்சி ஆணை யர் தாமரை, நகராட்சி பொறி யாளர் ரேணுகா, நகராட்சி மேற்பார்வையாளர் சந் தோஷ் ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.