திருப்பூர், மார்ச் 8- திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றி யம் கோடங்கிபாளையம் ஊராட்சி தொடர்புடைய விபரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்ட பெண்ணுக்கு அந்த ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் மிரட்டல் விடுத்து வருவதாக பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். பல்லடம் திருச்சி சாலை காரணம் பேட்டையில் குடியிருந்து வரும் மு. விஜிதா என்ற பெண் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் செவ்வாயன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோடங்கிபாளையம் ஊராட்சி சம்பந் தப்பட்ட தகவல்களை கேட்டு நான் தக வல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனு அனுப்பி இருந்தேன். இதை அறிந்து கோடங்கிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கா.வீ.பழனிசாமி, துணைத் தலைவர் லலிதாம்பிகை கண வர் செல்வராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் என பல நபர்கள் நான் வசித்து வரும் வாடகை வீட்டின் உரிமையாளர் வீட் டுக்குச் சென்று என்னை உடனடியாக வீடு காலி செய்ய வேண்டும், தவறி னால் ஊராட்சி தொடர்பான எதையும் செய்து தர மாட்டோம் என்று கூறியுள்ள னர். மேலும் நான் அங்கிருந்து காலி செய்யவில்லை என்றால் என்னை காலி செய்து விடுவோம் என்றும் மிரட் டியுள்ளனர். எனவே நான் வீட்டையும், விஜி பொது இ சேவை மைய அலுவலகத் தையும் காலி செய்து விட்டேன். இப் போது புகார் மனுவை வாபஸ் பெற வில்லை என்றால் என்னை லாரி ஏற்றி கொன்று விடுவோம் என்றும் மிரட்டு கின்றனர். எனவே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்ட தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். என்னுடைய வாழ்வுரிமை பறித்து இந்த நிலைக்கு கொண்டு சேர்த்த ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட் டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று விஜிதா கேட்டுக் கொண்டுள் ளார். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் நடவடிக்கைக்கு பரிந் துரைத்து இருப்பதாகவும் விஜிதா தெரிவித்தார்.