districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தருமபுரி, ஜன.24- பாப்பாரப்பட்டி அருகே பயிர்களை சேதப் படுத்தும் காட்டுயானைகளை விரட்ட நடவ டிக்கை எடுக்காத வனத்துறையிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப் போது ஊராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்ட தால், பொதுமக்கள் வனக்காவலர்களை சிறைபிடித்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வனப் பகுதியில் 2 காட்டு யானைகள் முகாமிட்டுள் ளன. அந்த காட்டுயானைகள் அவ்வப்போது  வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்ப டுத்தி வருகின்றன. எனவே, பயிர்களை சேதப் படுத்தும் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நீண்ட நாட்க ளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், வனத்துறையினர் முறையான நடவ டிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பாப்பாரப்பட்டி அருகே  உள்ள சஜ்ஜலஅள்ளியில், வேப்பனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி (35) வீட் டின் அருகே உள்ள நெல் வயலில் 2 காட்டு யானைகள் ஞாயிறன்று இரவு புகுந்தன.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த வனக்காவலர்களிடம், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் வலியுறுத்தினர். அப்போது திடீரென வனத்துறையின ருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமியை, வனக்காவ லர் ஒருவர் தாக்கி, கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வனக்காவலர்களை சிறை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் அங்கி ருந்து தப்பி சென்று விட்டார். மற்றொருவரை பொதுமக்கள் சிறைபிடித்து வைத்திருந்த தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த வனவர் கனகராஜ் தலை மையிலான வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் வன வர் கனகராஜ் தாக்கப்பட்டார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, வனவர் கனகராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக தரும புரி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் மற் றும் பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வனக்காவலர் விடுவிக்கப்பட்டார். இந்த சம் பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.