districts

img

வீட்டை சேதப்படுத்திய காட்டுயானை

கோவை, ஜூன் 2- கோவை மருதமலை அருகே வீட்டை காட்டுயா னைகள் சேதப்படுத்திய சம் பவம் அப்பகுதி பொதுமக்க ளிடையே அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை, மருதம லையடிவாரம் அருகே வழக் கமாக வரும் காட்டுயானைகள் அடிக்கடி  விசிக நகர், இந்திரா நகர், திடீர்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்து மீண்டும் வனப்பகுதிக்குச் செல்லும். இந்நிலையில்,  புதனன்று இரவு மலையிலிருந்து குட்டியு டன் இறங்கிய 6 காட்டுயானைகள், விசிக  நகர் அருகே வந்தன. அப்போது. அங்கிருந்த பாண்டியம்மாள் என்பவரது வீட்டின் சுவரை  உடைத்து, உள்ளே இருந்து பொருட் களை காட்டுயானைகள் சேதப்படுத்தின. இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு காட்டுயானைகள் மீண்டும் வனத்திற்குள் சென்றுவிட்டன. நல்வாய்ப்பாக பாண்டியம் மாள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற தால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.