கோவை, மார்ச் 3- சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள் ளது கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையில் இருந்து எடுக் கப்படும் குடிநீர், கோவை மாநகராட் சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுக ளுக்கும், வழியோரம் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் விநியோ கிக்கப்படுகிறது. அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர், சாடிவயலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணை யில் 49.50 அடி வரை தண்ணீரை தேக்க முடியும். ஆனால், அணையின் பாது காப்பு கருதி 45 அடி உயரம் வரை மட் டுமே கேரள அரசால் தண்ணீர் தேக்கப் படுகிறது. இந்நிலையில், சிறுவாணி அணை யின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வரு வதால் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் குடிநீருக்காக சிறுவாணி அணையில் இருந்து தினமும் ஐந்தரை கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில், அணைக்கு நீர் வரத்து அறவே இல்லை என்பதாலும், அணைப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகி றது. இதன் காரணமாக குடிநீருக்கு தட் டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.