உடுமலை, டிச.19- மக்கள் ஒற்றுமையை பிரிக்க முய லும் ஒன்றிய பாஜக அரசு, தனது வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும் என தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு திருப்பூர் மாவட்ட 4 ஆவது மாநாடு திங்களன்று உடும லையிலுள்ள வாணி திருமண மண் டபத்தில் நடைபெற்றது. அமைப் பின் மாவட்டத் தலைவர் முகமது ஜாபர் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் செந்தில் அஞ் சலி தீர்மானத்தை வாசித்தார். உடு மலை நகரத் தலைவர் முகமது அலி வரவேற்றார். மாநிலத் தலைவர் எஸ்.நூர்முஹம்மது மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில துணைச்செயலாளர் மாரி முத்து, விவசாய சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மது சூதணன், சிஐடியு தலைவர் கே.தண்டபாணி, மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டத் தலைவர் ஜெய பால் ஆகியோர் வாழ்த்துரையாற்றி னர்.
இம்மாநாட்டில், நிறுத்தி வைத் துள்ள சிறுபான்மை மாணவர்க ளின் கல்வி மானியத்தை ஒன்றிய மோடி அரசு உடனடியாக வழங்க வேண்டும். சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும். மக்கள் ஒற்றுமையை சீர் குலைக்கும் வெறுப்பு அரசியலை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். உடுமலை தாலூகா, மருள்பட்டி கிராமத்தில் இஸ்லாமிய மக்களுக் கான மாயனத்தில் தேசமடைந்தி ருக்கும் சுற்றுச்சுவரை மாவட்ட நிர் வாகம் சரி செய்து தர வேண்டும். அதிக ஆண்டு சிறையில் வாடும் சிறுபான்மை சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில், இஸ்லா மிய மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு மயானங்கள் அமைத்து தர வேண் டும். அனைத்து சிறுபான்மை மக்க ளுக்கும், தொழில் மற்றும் கல்வி கடன்களை வட்டியில்லாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து அமைப் பின் திருப்பூர் மாவட்டத் தலைவ ராக முகமது ஜாபர், மாவட்டச் செய லாளராக வை.ஆனந்தன், மாவட் டப் பொருளாளராக தேவ அன்பு, துணைத்தலைவராக இப்ரா ஹீம்ஷா, சிராஜ், அஸ்ரப் அலி, விக்டர்.வி.சாம், முஷாபிர் அகமது ஷாபி, துணைச்செயலாளராக செந்தில், முகமது அலி, பாஸ்டர் பிரேம்குமார், ஷகிலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், சிஐடியு ஆட்டோ சங்க உடுமலை தலைவர் ஜஹாங்கீர் நன்றி கூறி னார்.
சேலம்
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சேலம் மாவட்ட பேரவை, மேட்டூர் அரசு ஊழியர் சங்க கட்ட டத்தில் ஜோசப் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் வி.இளங்கோ துவக்க உரை யாற்றினார். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ஐ.ஞானசெளந்தரி அறிக்கையை முன்வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் சிங்க ராயன், மேட்டூர் அனல் மின் நிலைய சிஐடியு செயலாளர் செந்தில் வேல வன், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.எம்.தேவி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டக்குழு உறுப்பினர் ஜேசு ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். முடிவில், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் ஆர்.வெங்கட பதி நிறைவுரையாற்றினார். பவித்ரா நன்றி கூறினார்.