districts

இரண்டாம் தரமாக தமிழக மக்களை ஒன்றிய அரசு எண்ணுகிறது

சேலம், டிச.30- ஒன்றிய பாஜக அரசு, தமிழக மக் களை இரண்டாம் தர மக்களாக எண்ணு கிறதென தமிழக வாழ்வுரிமை கட்சி  தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டி னார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே  உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில  பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறு வன தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ  தலைமையில் சனியன்று நடைபெற் றது. இதன்பின் வேல்முருகன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட் டில் உடனடியாக சாதிவாரி கணக்கெ டுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி  பிப்.28 ஆம் தேதி கடலூரில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வு ரிமைக் கட்சி விரும்பிய இடத்தை அதன் கூட்டணி கட்சியான திமுக வழங்க  வேண்டும். தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவா ரண நிதியை ஒன்றிய அரசு வழங்க தயங்குவதாக எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராம னின் பேட்டி மற்றும் பேச்சு ஆணவம் நிறைந்ததாக உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு பேரி டர் நிதி வேண்டுமென ஒன்றிய அரசை  கேட்கும் பொழுது, ஏன் நிதி தர மறுக் கிறது? ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களை இரண்டாம் தர மக்களாக எண் ணுகிறது. அப்படி நடத்துகின்ற ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள்  உரிய பாடம் கற்பிக்க வேண்டும். மேலும், சட்டவிரோதமாக செயல்படும் துணை  வேந்தர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், என்றார்.