தில்லி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது ஒன்றிய பாஜக அரசு நடத்தி வரும் கொலைவெறி ஆட்டத்தைக் கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் கருப்புக்கொடி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ராம மூர்த்தி, மாநில நிர்வாகிகள் சந்திரமோகன், செல்வராஜ், தொழிற்சங்கங்கள் சார்பில் கிருஷ்ண மூர்த்தி, முருகன், கருப்பண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.