சேலம், ஜூன் 18- எல்ஐசி பங்கு விற்பனையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற காப் பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் 32 ஆவது மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. எல்ஐசி காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சேலம் கோட்டத்தின் 32 ஆவது ஆண்டு பொது மாநாடு, சேலம், ஓமலூர் நடராஜன் செட்டி யார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. சங்கத்தின் தலைவர் ஆர்.நரசிம்மன் தலைமையில் நடை பெற்ற இம்மாநாட்டில் ஓமலூர் பேரூ ராட்சி கவுன்சிலர் ஆர். அன்பழகன் வரவேற்புரையாற்றினார். இதில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.செந்தில்குமார், இணை செயலா ளர் ஆர்.கே.கோபிநாத், உதவி பொருளாளர் வி.ஜானகி ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டை வாழ்த்தி சகோதர தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த் திப் பேசினர். முன்னதாக, ஓமலூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள அம்பேத்கர், மகாத்மா காந்தியடி கள், பேரறிஞர் அண்ணா சிலைக ளுக்கு மாலை அணிவித்து பேரணி துவங்கியது. இதில், இந்திய பொருளாதாரத் திற்கு சிறந்த பங்களிப்பை ஆற்றி வரும் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு களை விற்கக் கூடாது. சேலம் கோட்ட முதுநிலை கோட்ட மேலா ளர், ஓசூர் கிளை மேலாளர் மற்றும் சேலம் கோட்ட எல்ஐசி நிறுவனத் தின் ஊழியர் விரோத போக்கை கைவிட வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதி ரான ஐடிசி குழு பாரபட்சமின்றி மூன் றாம் மற்றும் நான்காம் நிலை ஊழி யர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். கருணை அடிப்ப டையிலான பணி நியமனத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு தகுதி அடிப்படையில் விரிவாக பணி நிய மனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. முடிவில் ஏ.கலியபெருமாள் நன்றி கூறினார்.