districts

img

கலைஞர் கொடுத்த டிவி இன்னும் பயன்பாட்டில் உள்ளது

நாமக்கல், மார்ச் 31- அதிமுக கொடுத்த மிக்சி,  கிரைன்டர் எதுவும் செயல்பட வில்லை. ஆனால், கலைஞர் கொடுத்த டிவி இன்னும் பயன்பாட் டில் உள்ளதென ராஜேஷ்குமார் எம்.பி., பெருமிதம் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், வெண் ணந்தூரில் உள்ள அத்தனூர் பாலாஜி  மஹால் திருமண மண்டபத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடை பெற்றது. இதில், வனத்துறை அமைச் சர் மா.மதிவேந்தன், நாமக்கல் மக்க ளவை தொகுதியில் இந்தியா கூட் டணி சார்பில் உதயசூரியன் சின்னத் தில் போட்டியிடும் கொமதேக வேட் பாளர் மாதேஸ்வரனை அறிமுகம் செய்து வைத்து பேசினார். இதைத் தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர். என்.ராஜேஷ்குமார் எம்.பி., பேசுகை யில், பாஜக அரசு கடந்த காலங்க ளில் பெட்ரோல், டீசல், சமையல்  எரிவாயு விலையை குறைப்பதாக  சொன்னார்கள். மாறாக, அவற்றின் விலையை உயர்த்தியுள்ளனர். கல் விக்கடன் தள்ளுபடி என சொன்னவர் கள், அதானி, அம்பானி, நீரவ்மோடி போன்றவர்களின் வங்கிக்கடன்தான் தள்ளுபடி செய்துள்ளனர். மணிப் பூரில் பெண்கள் பலர் மானபங்கப்ப டுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட னர். இதற்கெல்லாம் ஒன்றிய பாஜக  தான் காரணம். இதனை வாக்காளர் கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.  தமிழகத்தில் அதிமுக ஆட்சியில்  இருந்தபோது, மக்கள் நலத்திட்டங் கள் எதுவும் செய்யவில்லை. இலவச  மிக்ஸி, கிரைன்டர், மின்விசிறி கொடுத்தார்கள். எதுவும் தற்போது  பயன்பாட்டில் இல்லை. ஆனால்,  கலைஞர் முதல்வராக இருந்த போது கொடுக்கப்பட்ட இலவச டிவி  இன்றும் பல வீடுகளில் உள்ளது. ஜெயலலிதா இறப்புக்கு பின் தூத் துக்குடி துப்பாக்கி சூடு, பொள்ளாச்சி  பாலியல் வன்கொடுமை, கொடநாடு  கொலை, கொள்ளை போன்றவை தான் அதிமுக செய்த சாதனை, என்று  கூறினார். இக்கூட்டத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் ஆர்.எம்.துரைசாமி, மாவட்டப் பொருளாளர் ஏ.கே.பால சந்தர், அத்தனூர் பேரூர் கழக செய லாளர் கண்ணன், மாவட்ட கவுன்சி லர் ஏ.ஆர்.துரைசாமி உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.