districts

img

ரயில் ஓட்டுநர் காலியிடங்களை நிரப்பிடுக

ஈரோடு, பிப். 15- ரயில்வேத்துறையில் தொடர்ந்து நடைபெறும் விபத்துகளை தடுக்க,  ரயில் ஓட்டுநர்களின் பணிச்சு மையை குறைத்திட வேண்டும், 16  ஆயிரத்து 373 ரயில் ஓட்டுநர் காலி யிடங்களை நிரப்பிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, அகில இந்திய ரயில் ஓட்டு நர் சங்கத்தினர் ஈரோட்டில் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நேரத்தை 10 மணி நேர மாகக் குறைக்க வேண்டும். வார ஓய்வை 40 மணி நேரமாக வழங்க வேண்டும். 48 மணி நேரத்திற்குள் வீட்டிற்கு திரும்ப அனுப்பிட வேண் டும். தொடர் இரவுப் பணியை இரண் டாகக் குறைத்திட வேண்டும். புதிய  பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தனியார்மயத்தைக் கைவிட வேண்டும். 16 ஆயிரத்து 373  ரயில் ஓட்டுநர் காலியிடங்களை நிரப் பிட வேண்டும். விருப்பப் பணியிட மாறுதலை செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய ரயில் ஓட்டு நர் சங்கத்தின் சார்பில் தென்னக ரயில்வே முழுவதும் 24 மணி நேர  உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.  ரயில் ஓட்டுநர்கள் ஈரோடு ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு, சேலம் கோட்டத் தலைவர் எஸ்.அருண்குமார் தலைமை வகித்தார். கோட்டச் செய லாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். தென்மண்டல துணைத் தலைவர் சுப்பிரமணியன் சிறப்புரை யாற்றினார். வியாழனன்று மாலை 5  மணிக்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பிஜு (டிஆர்இயு) நிறைவுரையாற்றினார். இறுதியாக துணைப் பொருளாளர் சஜீர் நன்றி கூறினார்.