districts

img

சுற்றுலாத்துறை நல்ல லாபத்தில் இயங்குகிறது: அமைச்சர் பேட்டி

கோவை, மார்ச் 2- தமிழகத்தில் சுற்றுலாத்துறை நல்ல லாபத்தில் இயங்கி வருகிறது. இந்தியாவில் முதன்மை சுற் றுலா மையமாக முதலிடத்திற்கு கொண்டு வருவ தற்கான பணிகளை முதல்வரின் ஆலோசனையின் படி செய்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித் தார். கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வாலங்குளத்தில் சுற்றுலாத்துறை அமைச் சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இதில், வாலங்குளத்தில் சுற்றுலாத் துறையின் படகு  சவாரி செயல்பட்டு வருகிறது. ஆனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, வாகனம் நிறுத்து வதற்கான இடம் இல்லாததால் அவதிக்குள்ளாகி னர். இதற்கு தீர்வாக வாகன நிறுத்துமிடம் அமைப் பதற்கான திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டார். அப் போது அதிகாரிகளிடம் இது குறித்தான திட்ட  அறிக்கை தயார் செய்து கொடுக்கவும் முதலமைச் சர் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக செய்து கொடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். இந்த ஆய்வின்போது, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், மேயர் கல்பனா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் செய்தியா ளர்களிடம் பேசுகையில், திராவிட மாடல் ஆட்சி யில் சுற்றுலாத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு  வருகிறது. சுற்றுலாத்துறை இந்தியாவிலேயே உள் ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகையில் முதலிடத்தி லும், அயல்நாடு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2  ஆவது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது. அதை முத லிடத்தில் கொண்டு வருவதற்கான பணிகளை நாம் செய்து வருகிறோம். உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி தருகிறோம். இதனால் பொருளாதாரம் மேம்படும். சுற்றுலாத்துறை லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் முதல்வர் ஸ்டா லின் ஆட்சியில் கூடுதலான லாபத்தில் இயங்கி வருகிறது, என்றார். படகு சவாரி கட்டணம் அதிகமாக இருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, கட்ட ணத்தை குறைப்பதற்கான ஆய்வு மேற்கொள்கி றோம். காலத்திற்கு ஏற்ற மாதிரி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் கட்டணம் பெரி தாக தெரியாது, என்றார்.