districts

img

பாஜக அரசின் தவறான ஜவுளி கொள்கையால் ஜவுளித்தொழில் கடும் பாதிப்பு – அமைச்சர் சாமிநாதன்

கோவை, ஏப்.9- பாஜக அரசின் தவறான ஜவுளி  கொள்கையால், திருப்பூர் மற்றும்  சோமனூர் பகுகளில் ஜவுளித்தொ ழில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள் ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரி வித்தார்.  இந்தியா கூட்டணியின் கோவை  நாடாளுமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் கணபதி ராஜ்குமார்,  சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட சாமளாபுரம் பேரூராட்சி பகுதி யில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார்.  இப்பிரச்சாரத்தில் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர் புத்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று பொதுமக்களிடம் பேசு கையில், தவறான ஜவுளி கொள் கையால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் மற்றும் சோமனூர் பகு திகளில் ஜவுளி தொழில் முற்றி லும் முடங்கி விட்டது. இங்கு துணி  ஏற்றுமதி செய்வது தவிர்த்து, வெளிநாடுகளில் இருந்து தற் போது இறக்குமதி செய்யப்பட்ட துணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பெரும் ஆபத்தை  ஏற்படுத்தக் கூடியது. தமிழக அரசு  நிறைவேற்றிய திட்டங்களைப் போலவே, நமது இந்தியா கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கை யில் மகாலட்சுமி திட்டம் (ஏழை  பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அளிக்கக்கூடிய திட்டம்) சிறப்பான செயல் திட்டங் களை அறிவித்துள்ளது. கண்டிப் பாக இந்தியா கூட்டணி ஆட்சிக்கு  வரும் பொழுது, அறிவிக்கப்பட்ட  அத்தனை திட்டங்களும் செயல்படுத்தப்படும். ஒன்றியத் தில் ஊழல் ஆட்சியை விரட்ட,  இந்தியா கூட்டணி வேட்பாளர்  கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரி யன் சின்னத்தில் வாக்குகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  இதனைத்தொடர்ந்து, வாக்கா ளர்கள் மத்தியில் பேசிய வேட்பா ளர் கணபதி ராஜ்குமார், கல்வி வளர்ச்சியிலும், பெண்கள் முன் னேற்றத்திற்காகவும் தேவையா னவற்றை பூர்த்தி செய்யும் அர சாக திமுக அரசு உள்ளது. ஆனால்,  இதற்கு நேர் எதிரான அரசாக பாஜக  உள்ளது. 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய் தார்கள்? என்பதை நீங்கள் எண்ணி  பார்க்க வேண்டும். 10 ஆண்டு காலம் போதாது என்று பதவிக் காக ஆசைப்பட்டு, மீண்டும் மக் களை ஏமாற்ற பாஜக துடிப்பதா கவும், இவர்களை விரட்ட உங்க ளின் மதிப்பு மிக்க வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளிக்க  வேண்டும் என்றார்.  முன்னதாக இந்த பிரச்சாரத் தின்போது, சாமளாபுரம் பேரூ ராட்சி தலைவர் வேலுச்சாமி, கரு மத்தம்பட்டி நகராட்சித் தலைவர் நித்திய மனோகரன், சூலூர் வடக்கு  ஒன்றியச் செயலாளர் அன்பரசு, பொதுக்குழு உறுப்பினர் துரை ராஜ், மருதாச்சலம் மற்றும் இந்தியா  கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் பலர் கலந்து கொண்டனர்.