திருப்பூர், மார்ச் 9 – தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழி லாளர் மீது தாக்குதல் நடத்துவதாக பரப் பப்பட்ட வதந்தி பிரச்சனையில் பதற்றம் தணிந்துள்ளது. எனினும் இதுபோல் வதந்தி பரப்புவது குறித்து கண்காணிப் போம் என்று தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு கூறினார். திருப்பூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் வியாழ னன்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், சைமா, சாயஆலை சங்கம், டீமா உள் ளிட்ட தொழில்துறையினருடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை மேற் கொண்டார். இக்கூட்டத்துக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: தமிழகத்தை பற்றி உண்மைக்கு புறம்பான நிகழ்வுகளால் ஏற்பட்ட பீதி, பயம், பதற்றம் தற்போது தணிந்துள் ளது. கடந்த 8 நாட்களாக தமிழகத்தின் அனைத்து மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் ராணுவம் போன்று ஒரே அணியாக நின்று, இரவு பகலாக பணி யாற்றி வதந்தியை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் 11 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தெரியாமல் செய்துவிட்டதாக மன் னிப்பு கேட்டுள்ளனர். தவறான செய்தி பதிவிட்டோர் தங்கள் பதிவை நீக்கி உள் ளனர். வதந்தியை தொடர்ந்து கண்கா ணிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு, உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டவர் கள் சிலர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். அவர்களது ஜாமீனை நீக்கவும் காவல் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினால்தான் கூடுதல் விபரத்தைத் தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கண்காணிப்பு அலு வலர் மற்றும் குழு உருவாக்கப்பட்டுள் ளது. வதந்தி பரப்பியோர் வங்கி கணக்கு விவரங்களை சேகரித்து வருகிறோம், என்றார். இதில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாநகர காவல் ஆணையர் பிரவீன்கு மார் அபிநபு, டிஐஜி விஜயகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.